உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.35 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் மின் உதவி பொறியாளர்!

ரூ.35 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் மின் உதவி பொறியாளர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: விருதுநகரில் மீட்டர் இடமாற்றம் செய்ய ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலகம் உதவி பொறியாளர் மாடக்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.விருதுநகரை சேர்ந்த காந்தி மகன் மாடக்குமார். மின்வாரியத்தில் விருதுநகர் வடக்கு ஊரக பிரிவு உதவி பொறியாளராக பணிபுரிகிறார். இவரிடம் டி.கே.எஸ்.பி., நகரை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் ஐ.டி., ஊழியரான லலிதாம்பிகை 40, புதிய வீடு கட்டியதால் மீட்டரை இடமாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்கு மாடக்குமார் ரூ.35 ஆயிரம் கேட்டுள்ளார்.இந்நிலையில் லலிதாம்பிகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை லலிதாம்பிகையிடம் கொடுத்தனர். பணம் தயாராக உள்ளதாக உதவி பொறியாளரிடம் லலிதாம்பிகை கூற, வீட்டில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாடக்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

TNP
ஆக 06, 2025 17:08

லஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள். அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள்


Suresh Sivakumar
ஆக 06, 2025 06:14

Bribe is everywhere. Even to register weddings. Off course not take directly. Had to pay 12000 instead of few hundreds in Chennai. Mudal konal mutrilum konal. From ministers to peons fornthe past 50 years or so.


Rajpal
ஆக 05, 2025 20:43

லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்திட்டு, கொடுத்த பணத்தை திருப்பி எடுக்க வேண்டாமா? என்னய்யா இது அநியாயம் ??


சிந்தனை
ஆக 05, 2025 16:52

15 ஆண்டுகள் பாடம் நடத்தி திருடர்களை உருவாக்கிய கல்வித் துறைக்கும் நீதித்துறைக்கும் மிக்க நன்றிகள் ஓய்வெடுக்காதீர்கள் நாட்டில் அனைவரையும் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் ஆகும் வரை உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள் அறிவு கெட்டவர்களாகவே என்றும் இருங்கள் திருந்தவே திருந்தாதீர்கள் கொள்ளையடிக்க வந்தவர்களுடன் போராடி நாங்கள் சுதந்திரம் கேட்டது பெற்றது தவறுதான் என்று நாங்கள் அழுது ஒப்பாரி வைத்து சாகும் வரை திருந்தாதீர்கள்


sasikumaren
ஆக 05, 2025 15:44

லஞ்சம் வாங்கியவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கே கைது என்றால் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மக்களின் வரிப்பணத்தை ஒரு லட்சம் கோடியை ஊழல் மூலம் சம்பாதித்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் குவித்து வைக்கும் தமிழக அரசியல் வியாதிகளுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைத்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கும் தமிழக மக்கள் அதெப்படி சரியாகும் மக்களுக்கு மூளை மழுங்கி விட்டதா


V Anbarasan
ஆக 05, 2025 10:27

வீட்டுக்கு மீட்டர் இடம் மாறுதலுக்கு ரூ35000 இலஞ்சம் என்பது நம்பகரமாணதக இல்லை.புகாரில் ஏதோ தவறு உள்ளது


Kasimani Baskaran
ஆக 05, 2025 04:07

தமிழகத்தைப்பொறுத்தமட்டில் லஞ்சம் வாங்குவது அடிப்படை உரிமை. இதில் தலையிட திராவிடமாய நீதிமன்றங்கள் உரிமை பெறவில்லை.


M S RAGHUNATHAN
ஆக 04, 2025 20:17

நாளை லஞ்சம்.வாங்கியவர் நான் மட்டும் குற்றவாளி அல்ல. எனக்கு லஞ்சம் கொடுத்தவரும் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளி. ஆகவே அவரையும் கைது செய்ய வேண்டும் என்பார். இம்மாதிரி அடிக்கடி நான்.லஞ்சம் வாங்கி இருக்கிறேன். அதில் எனது மேலதிகாரிகளுக்குஅதிக பங்கு கொடுத்து இருக்கேன். உண்மையில் எனது மேலதிகாரிகள் தான் லஞ்சம் வாங்காமல் ஒரு வேலையும் செய்து தரக் கூடாது என்றுவாய் மொழி உத்தரவு.போட்டு இருக்கிறார் என்பார். வர வர ரமணாபட காட்சி போல வருகிறது.


தியாகு
ஆக 04, 2025 19:01

இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே தற்குறி டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியவரை வசை பாடுவார்கள். 35000 கோடிகள் ஊழல் மூலம் சம்பாதித்த திமுகவின் தலைமை குடும்பத்தினரையும் மந்திரிகளையும் மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று தட்டில் ஏதாவது பிச்சை போடமாட்டார்களா என்று பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கு என்று ஒரு தனி குணம் உண்டு என்று அடிக்கடி தங்களுக்கு தாங்களே டுமிழர்கள் தற்பெருமை பேசிக்கொள்வார்களே, அது இதுதானே? விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


Bala
ஆக 04, 2025 21:53

கேவலமான பதிவு. நீங்கள் தமிழில் எழுதி இருப்பதால் நீங்களும் தமிழர்தான். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அதானி, அம்பானி மற்றும் திமுக குடும்பத்தின் மேல் குற்றம் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் நீங்கள் வீரமாக சென்று நீதிமன்றத்த்தில் முறையிடவும்


சிட்டுக்குருவி
ஆக 04, 2025 18:34

தினம் தினம் லஞ்சம் செய்திவந்தவண்ணம் இருக்கின்றது .யாரும் திருந்துவதாக தெரியவில்லை .அரசும் கண்டுகொவதாக இல்லை .லஞ்சவாதிகளிக்கு அரசு பாதுகாப்புக்கொடுக்கின்றதோ என்று தோன்றுகின்றது .சாராயம் விற்க ஒரு துறையை ஏற்படுத்திய அரசுக்கு மக்களுக்கு லன்ஜலாவண்யமில்லம்மாள் சேவைக்கு ஒரு சேவைத்துறையை ஏற்படுத்தி ,மக்களுக்கு சேவை துரிதமாகவும் ,லன்ஜலாவண்யமில்லம்மாலும் கிடைக்க ஏற்பாடு செய்ய தோன்றவில்லையா ?லஞ்சத்தை பரவலாகியதுதான் சமூகநீதியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை