உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பா.ஜ., மீது துரை குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பா.ஜ., மீது துரை குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை குற்றம்சாட்டினார்.ராமநாதபுரத்தில் அவுர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. ஒரு ராஜ்யசபா, இரு லோக்சபா தொகுதிகளை கேட்டுள்ளோம்.வெளிநாடுகளில் இருந்து வாங்கி தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் விற்கின்றனர். அதற்கு பதிலாக தமிழக விவசாயிகள் தயாரிக்கும் தேங்காய், கடலை, சூரியகாந்தி எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.மத்தியில் மோடி அரசு செயல்பாடு சரியில்லை. உரிமைக்காக போராடும் விவசாயிகளை தாக்குகின்றனர். மோடி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது. மீனவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.இலங்கை அரசுக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி செய்கிறது. அதை அந்த நாடு மறந்து விட்டது. லோக்சபா தேர்தலில் எங்கள் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றிபெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
பிப் 23, 2024 19:39

வடி­வேலு பாணி­யில் வாக்­கு­­று­தி­களை எல்லாம் தேர்தல் முடிந்­த­வுடன் கிழிச்சுப் போட்­டு­டணும். நினை­­வூட்­டவே கூடாது. மக்­களே மறந்­துட்­டாங்க.. நீங்க ஏன் சார் கிளப்­பு­றீங்க... உங்க அப்­பாவும் தான் தி.மு.க.வை எதிர்த்து கட்சி துவக்­­கி­னாரு... அவங்க கூட தான் இப்ப கூட்­டணி. அம்­மாவை எதிர்­த்து நடை­ப­யணம் போனாரு... கடை­சியில் அவங்க கூட கூட்­டணி வைக்­க­­லை­யா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை