உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவு பயணத்தை தவிர்ப்பீர்: லாரி மீது கார் மோதல்: 6 பேர் பலி

இரவு பயணத்தை தவிர்ப்பீர்: லாரி மீது கார் மோதல்: 6 பேர் பலி

தென்காசி : புளியங்குடி அருகே சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் சென்ற ஆறு பேர் பலியாயினர். நள்ளிரவில் இந்த பயணம் மேற்கொண்டதால் விபரீதம் நடந்துள்ளது. இரவு பயணத்தையும், அதிகாலை பயணத்தையும் தவிர்த்தால் விபத்து இல்லாமல் தப்பிக்கலாம் என்ற அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் 24, என்பவருடன் காரில் குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். கடையநல்லுார் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான காரை உறவினரான கார்த்திக் ஓட்டிச்சென்றார். அவருடன் புளியங்குடியை சேர்ந்த போத்திராஜ் 30, சுப்பிரமணியன் 27, முத்தமிழ்செல்வன் 27, முகேஷ் (எ) மனோ 19, வேல் மனோஜ் 24சென்றனர்.

அதிகாலை துயரம்

குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை 3:40 மணிக்கு புளியங்குடி அருகே காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். தென்காசி - - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கிலிபட்டி- புன்னையாபுரம் இடையே வந்தபோது கார், டிரைவர் கார்த்திக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதியது. சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேரும் சிகிச்சைக்கு செல்லும் வழியில் ஒருவரும் என காரில் இருந்த மொத்தம் 6 பேரும் பலியாயினர்.

மீட்பு பணி

தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.பலியான முத்தமிழ்செல்வன் திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அரச பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர். புளியங்குடியில் மனைவி புனிதா வீட்டிற்கு வந்திருந்தார். புனிதாவின் தம்பி முகேஷும் விபத்தில் பலியானார். இறந்தவர்கள் அனைவரும் கட்டட தொழிலாளிகள்.சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.,ராஜா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., சதன் திருமலை குமார் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். சிமென்ட் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அர்ச்சனாபுரத்தை சேர்ந்த பிரகாஷ் 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

g.s,rajan
ஜன 29, 2024 22:09

இந்தியாவில் தரமற்ற ,உறுதியற்ற சோப்புடப்பா வாகனங்களால் தொடரும் சோகங்களுக்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம் ....


g.s,rajan
ஜன 29, 2024 20:21

Soap Box Cars manufactured in India are not Strong Enough to With Stand the Heavy Impacts.


g.s,rajan
ஜன 29, 2024 19:53

Over Speeding,Drunken Driving,Sleep Less Ness,In Experienced Driving,Tired ness,Improper Planning,Over Confidence leads to Many Accidents Especially in Wee Hours.


ராஜா
ஜன 29, 2024 19:31

ஒரு வழிச்சாலைகளில் எதிர் வண்டி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் முகப்பு விளக்குகளை மிக பிரகாசமாக எரிய விட்டுக்கொண்டும் வருகிறார்கள். இதற்கு லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களும் விதிவிலக்கல்ல. மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட LED விளக்குகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட பிரகாசமாக ஒளிர்ந்து எதிரே வருபவர்களின் கண்களையே சில நிமிடங்கள் குருடாக்கி விடுகிறது. இது போன்ற விதி மீறல்களும் விபத்து ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகி விடுகிறது.


NicoleThomson
ஜன 29, 2024 20:19

நானும் இதனை எழுத நினைத்தேன் , நீங்க சொல்லிடீங்க இந்த சிக்கலை அரசு மட்டுமே சரி செய்ய முடியும் என்றே தோன்றுகிறது


Ramu
ஜன 29, 2024 18:22

வாகனம் ஓட்டும்போது ஒவ்வொரு நொடியும் அலர்ட் ஆக இருக்கவேண்டும் - தூக்கம் வந்தாலோ, அசதியாக இருந்தாலோ அசிங்கம் பார்க்காமல் காரை ஓட்டமாட்டேன் என்று சொல்லி ரெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். சும்மா வீராப்புக்கு ஒட்டி அந்த 24 வயது டிரைவர் கார்த்திக், தன்னையும் சேர்த்து ஆறு பேரின் வாழ்க்கையை அழித்தவர் என்ற பழியோடு இறந்திருக்கிறார். எவ்வளவு கொடூரம். RIP


ponssasi
ஜன 29, 2024 17:47

இரவு பயணத்தில் டிப் அண்ட் டிம் (முகப்பு விளக்கை அணைத்து போடுவது) அனைத்து ஓட்டுநர்களும் கடைபிடிக்கவேண்டும். இன்றைய ஓட்டுனர்களுக்கு அது தெரிவதில்லை. நாம் சிக்னல் கொடுத்தாலும் எதிரில் வருபவர் அதை ப்ரொருட்படுத்துவதில்லை, நான் இரவு பத்து மணிக்குள் பயணத்தை முடித்துவிடுவேன் அதிகாலை ஆறுமணிக்கு தாயாராகிவிடுவேன்,


Ram pollachi
ஜன 29, 2024 17:13

அடுத்த வாகனங்களுக்கு விட்டு கொடுத்து ஓட்ட வேண்டும். முதலில் நாம் பயணம் செய்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் மாறாக பந்தயம். என நினைத்தால் ஆபத்து. லாரிகள் பெரும்பாலும் ஊர்ந்து செல்லும் இடை இடையே கார்கள் உள்ளே புகுந்து சென்றால் அது நமக்கு இழப்பாக முடியும்... கவனம் சிதறினால் மரணம்.


N Annamalai
ஜன 29, 2024 17:06

லார்ரி ஓட்டுனர்கள் ,இரவு பேருந்து ஓட்டுனர்கள் ஓட்டுவது அவர்கள் தொழில் .மதியம் தூங்கிவிட்டு அதன் பிறகு குளித்து விட்டு சாமி கும்பிட்டு பயபக்தியுடன் வேலைக்கு வருகிறார்கள் .அது வேறு பஸ் காசை மிச்சம் செய்து தண்ணி அடிப்பது வேறு .


r ravichandran
ஜன 29, 2024 16:40

லாரி டிரைவர் கைது எதற்கு? அவர் சரியான முறையில் தான் வண்டியை ஓட்டி கொண்டு வந்து இருந்தார். எதிர் புறம் வந்த கார் தான் பாதையை மீறி இந்த விபத்தை ஏற்படுத்தியது. இந்த அரசுக்கு யாரையாவது கைது செய்ய வேண்டும். அந்த லாரியின் முன் பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வண்டி வாடகை ,கால தாமதம் ஏற்கனவே நஸ்டம், இதில் அப்பாவி டிரைவர் வேறு கைது..


அசோகன்
ஜன 29, 2024 16:40

இரவில் எப்போதுமே ட்ரிவிங் செய்வதை தவிற்க வேண்டும் (காரணம் தூக்கம் மற்றும் கண் கூசுதல்) அப்படியே சென்றாலும் முன்பக்கம் அமர்பவர் டிரைவரிடம் பேசிக்கொண்டே போகவேண்டும்........ விஷயம் கிண்டலாக தெரியலாம் விபத்து நடந்ததை நேரில் பார்த்தால் விபரீதம் புரியும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை