உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு முதல்வர் உத்தரவு

அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு முதல்வர் உத்தரவு

சென்னை:மத்திய அரசு பணியாளர்களுக்கு, ஜூலை 1 முதல் 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 53 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், ஜூலை 1 முதல் அகவிலைப்படியை, 50 சதவீதத்தில் இருந்து, 53 சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்த உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 1,931 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி