உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை விடுவிக்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை விடுவிக்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை; மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அவர் எழுதிய கடிதத்தின் விவரம்; மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் 31-01-2025ம் நாளிட்ட கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மையம், மகளிர் சக்தி இயக்கம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் போன்ற மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு. 29-1-2025ம் நாள் நிலவரப்படி ரூ.715.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.பெரும்பாலான நேர்வுகளில், மத்திய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவிற்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இது நாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும், மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டுமென்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

prasath
பிப் 18, 2025 22:22

முன்பு வரை புறங்கையை டுடே விடாம நக்கமுடியும் ஆனால் டிஜிட்டல் இந்தியா ஆனா பின் மத்திய அரசு இதற்கு முன் கொடுத்த பங்கு பணதிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால் மீண்டும் வராது


R.MURALIKRISHNAN
பிப் 18, 2025 21:05

இதற்கு பதிலா ஒரு கோடி ஸ்டிக்கர் கேட்டிருக்கலாம் அரசே


Ramesh Sargam
பிப் 18, 2025 20:35

ஏன் சீக்கிரம் விடுவிக்கவேண்டுமென்றால், மகனின் ஆசை, அதான் இந்த வருட கார் ரேஸ் நடத்த நிதி வேண்டும். மேலும் சொரியாருக்கும், திருட்டு ரயில் ஏரிக்கும் மேலும் பல சிலைகள் வைக்கவேண்டும்.


M Ramachandran
பிப் 18, 2025 20:19

ஏன் கையரிப்பு ஜாஸ்தியாயிடுச்சா? அடித்த கொள்ளை பணத்தய் கொஞ்சமா மக்களுக்கு கொஞ்சம் திருப்பி விடலாமில்லே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை