உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி: பன்னீர்செல்வம் உறுதி

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி: பன்னீர்செல்வம் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானவை. தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்,'' என மதுரையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மதுரையில் நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசியதாவது: ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பதவி 2026 வரை உள்ளது. அதனால், பழனிசாமி தன்னை பொதுச் செயலராக அறிவித்துக் கொண்டது தவறு. பழனிசாமி பதவிக்கு வந்த பின் நடந்த எட்டு தேர்தல்களில், அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. ஏன், எடப்பாடி தொகுதியிலேயே தோல்வியை கண்டுள்ளது. தான்தோன்றித்தனமாக செயல்படும் பழனிசாமி கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் தொண்டர்கள் அவரை துாக்கி எறிவர்.செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் முழுச் செலவையும் நான் தான் செய்தேன். என் வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஜெயக்குமார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் எங்கும் அவர் நடமாட முடியாது.நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானவை. பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

எனக்கு பவர் கொடுத்து விட்டனர்!

பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:பழனிசாமி, வரும் லோக்சபா தேர்தலிலும் படுதோல்வி அடையப்போவது உறுதி. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே அங்கம் வகித்து உள்ளோம்; கூட்டணி தொடரும்.இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கின்றனர் என, இரட்டை இலைக்கு உரிமை கோரப் போகிறோம். அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம். பழனிசாமி பக்கம் 2 கோடி தொண்டர்கள் இருக்கின்றனர் என்பது பொய். அவரது தரப்பு, வாக்காளர் அடையாள அட்டையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. பிரிந்திருந்த சக்திகள் - சசிகலா மற்றும் தினகரன் ஒன்று சேர்ந்து எனக்கு 'பவர்' கொடுத்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Anand
பிப் 06, 2024 16:01

எந்நேரமும் தூங்கி வழிந்துக்கொண்டிருந்தால் இப்படிப்பட்ட கனவுகள் தான் வரும்....


V. Kanagaraj
பிப் 06, 2024 14:12

கனவில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது


KUMAR
பிப் 06, 2024 12:41

அதிமுக, திமுக இல்லாத காலம்கூட விரைவில் வரலாம்


KUMAR
பிப் 06, 2024 12:38

இலை சிறுத்து மலர் பெருகும் காலமிது. தாமரையில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலே அதிகம்தான்


S Regurathi Pandian
பிப் 06, 2024 12:36

இருக்கலாம். ஒருவேளை மற்ற மாநிலங்களில் இரட்டை இல்லை சின்னம் இவருக்கு ஒதுக்கப்பட்டு இவர் போட்டியிடலாம்.


Kanakala Subbudu
பிப் 06, 2024 12:24

அவருக்கு தான் பேசுவதின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது. அது இரட்டை இலை சின்னத்தை ஏற்கனவே பழனிசாமி அணிக்கு கொடுத்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது சின்னம் கொடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்க்கு மட்டுமே உள்ளது. அங்கீகாரம் இல்லாத கட்சிகள் அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும் என்று உத்திரவாதம் இல்லை


ديفيد رافائيل
பிப் 06, 2024 12:04

பழனிச்சாமி BJP உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கு. சீட் வாங்கி எவனுமே இரட்டை சிலை சின்னதுல போட்டியிட மாட்டான்.


gayathri
பிப் 06, 2024 10:05

அப்போ கால்ல விழ போறீங்க. அப்படித்தானே


M.COM.N.K.K.
பிப் 06, 2024 09:19

தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம்.பிறகு சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது .


Veeraraghavan Jagannathan
பிப் 06, 2024 09:12

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை