உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கபோவதாக பத்திரிகைகளில் கிசு கிசு வருகிறது'' எனக்கு பிடித்தது இளைஞரணி செயலர் பதவிதான் என அமைச்சர் உதயநிதி பேசினார்.தி.மு.க., இளைஞரணியின் 45ம் ஆண்டு துவக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது. இதில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y6xvmcgb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மோடிக்கு வெற்றி கிட்டாது

இந்த முறை, 2 அல்லது 3 தொகுதிகளை பிடித்து விட வேண்டும் என்று தமிழகத்திற்கு பிரதமர் மோடி 6,7 முறை வந்தார். அவர் ஆயிரம் முறை வந்தாலும், வெற்றி கிடைக்காது என்று சொன்னேன். அதை மக்கள் உண்மை ஆக்கி உள்ளனர். பிரதமர் பிரசாரம் செய்தும் பா.ஜ.,விற்கு ஏமாற்றமே மிஞ்சியது. 40 தொகுதிகளிலும் ‛ இண்டியா' கூட்டணிக்கு மக்கள் வெற்றியைத் தந்தனர். வெற்றிக்கு இளைஞரணியும் காரணம். பா.ஜ., பொய்களை பரப்பி அரசியல் செய்கின்றனர்.

மறக்க மாட்டேன்

இங்கு பேசியவர்கள் எல்லாம் துணை முதல்வர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றியாக சொன்னீர்கள். பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது. வதந்திகளை படித்து விட்டு , இது நடக்க போகுதோ, என்று பலர் கோல் போடுகிறீர்கள், துண்டு போடுகிறீர்கள். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் . எவ்வளவு பெரிய பதவி வந்தாலும் , பொறுப்பு வந்தாலும் இளைஞரணி தான் எனது மனதிற்கு நெருக்கமானது. இளைஞரணியை மறக்க மாட்டேன்.

முக்கியம்

லோக்சபா, விக்கிவராண்டி தேர்தலுக்கு உழைத்தோமோ அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் உழைக்க வேண்டும். பெண்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.கூட்ட முடிவிற்கு பின்னர் நிருபர்கள் துணை முதல்வர் குறித்து கேள்வி கேட்டபோது; பொறுப்பு மாற்றம் குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Muthu Kumaran
ஜூலை 22, 2024 12:50

போதுமடா சாமீ , உங்க நடிப்பு


tmranganathan
ஜூலை 22, 2024 07:40

அப்புறம் என்ன மன்னராட்சி போல ராஜ்மாதா யாருன்னு மக்கள் புரிந்துகொண்டார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 07:44

உரிமம் வாங்கி ஜால்ரா தட்ட வேண்டும். இல்லை என்றால் கல்தா கொடுக்கப்படும். பள்ளித்தோழர் போன்ற பிரிவிற்கெல்லாக் இதில் கண்டிப்பாக விதிவிலக்கு உண்டு.


Palanisamy Sekar
ஜூலை 21, 2024 07:36

துண்டுபோடுவது, முகஸ்துதி போடுவதை உனது தொண்டன் நிறுத்திவிட்டால் உங்களுக்கு பைத்தியமே பிடித்திவிடுமே. அதுதானே திமுகவிற்கு பிடித்த ஒன்று. தளபதி ன்னு பட்டப்பெயர் பொருத்தமானதா சொல்லுங்களேன் பார்ப்போம். ஆனாலும் அதைத்தானே நீங்கள் விரும்புகின்றீர்கள். சின்னவர்... இதை சொல்லியே பக்கத்தில் இருக்கும் கல்வித்துறை அமைச்சர் பதவியை பெறவில்லையா என்ன? பத்தாண்டு கூப்பில் இருந்த நிலையை மறந்துவிட்டு பேசுறாரு உ நிதி. இவர் தாத்தா அழாத அழுகையா? கெஞ்சினார் ஆட்சியை கொடுங்க எம் ஜி யார் அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்ததும் கொடுத்துவிடுகின்றேன் என்று. அதனையெல்லாம் சில்வண்டு நினைவில் கொள்ள வேண்டும். பணம் கொடுத்ததும் கூட 28 கட்சிகளின் தயவால் பெறுகின்ற வெற்றி என்பது பிச்சைக்காரனின் பாத்திரத்தில் இருக்கும் கலவை சோறு போல. இதில் என்னமோ தானே தனித்து நின்று வெற்றிபெறமாதிரி பில்டப். பாஜகவின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் வாய்துடுக்கு அதிகமானால் தக்க சமயத்தில் மக்கள் சரியானப்பாடம் புகட்டுவர் இந்த சின்னவற்றுக்கு


ManiK
ஜூலை 21, 2024 06:55

ஒரு குறைகுடம் பேச்சுக்கு நூறு சொம்புகளை கைதட்டும் அவலமான நிலை.


sureshpramanathan
ஜூலை 21, 2024 06:18

I Donot know when this stupid Tamilnadu people will see and realise the cunning DMK goons throwing small money like biscuits to dog and the votes to come back and loot the same idiots Tamilnadu people Thiese idiots include even educated useless crowd falling prey to DMK goons Only god can save Tamilnadu Youth please understand be responsible Escape being looted by DMK


xyzabc
ஜூலை 21, 2024 05:20

They can talk anything


ramani
ஜூலை 21, 2024 05:04

மோடிஜி வெற்றி பெறவில்லை என்று சொல்லி சொல்லி மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதை மறைக்க எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கிறது


Natarajan Ramanathan
ஜூலை 21, 2024 03:06

படு கேவலமான செயல்பாடுகளால் இப்போது இருக்கும் அமைச்சர் பதவியே போய்விடும் என்று கேள்வி.


Matt P
ஜூலை 21, 2024 02:04

பெண்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்...அடிக்கடி வண்டியில இலவசமாக போய் வருபவர்களாக இருக்கலாம். நன்றி கடன்பட்டவர்கள்.


மேலும் செய்திகள்