| ADDED : செப் 01, 2011 12:09 AM
மதுரை : ''மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி தரப்படும்,'' என, கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் செப்., 2 முதல் 11 வரை புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. 128 தமிழ், 55 ஆங்கிலம், 13 மல்டிமீடியா ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம். தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது. புத்தகம் வாங்கும் பொதுமக்களுக்கு 10 , மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகை, என்றார். சங்க செயலாளர் லட்சுமணன், தலைவர் சொக்கலிங்கம், கவிஞர் தேவேந்திரபூபதி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூரன் கலந்து கொண்டனர்.