உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12ம் தேதி டில்லியில் பேரணி தி.மு.க., அறிவிப்பு

12ம் தேதி டில்லியில் பேரணி தி.மு.க., அறிவிப்பு

சென்னை:''இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, 16 கட்சிகளின் மாணவர் அமைப்புகளின் சார்பில் டில்லியில் ஜன., 12ல் பேரணி நடக்கவுள்ளது,'' என, தி.மு.க., மாணவரணி செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., கூறினார்.சென்னை அறிவாலயத்தில் அவரது பேட்டி:தி.மு.க., மாணவர் அணி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின், 16 மாணவர் அமைப்புகள் ஒன்று கூடி, 'யுனைடெட் ஸ்டூடென்ஸ் ஆப் இந்தியா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.இந்த அமைப்பு சார்பில், மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாத்திடும் வகையில், தேசிய கல்வி கொள்கையை நிராகரிப்போம்; கல்வி உரிமையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன், வரும் 12ல், டில்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்.இவ்வாறு எழிலரசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை