உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.ஐ.ஏ.,க்கு தெரியாததா இவருக்கு தெரிய போகிறது? வருண்குமார் பேச்சுக்கு சீமான் பதிலடி

என்.ஐ.ஏ.,க்கு தெரியாததா இவருக்கு தெரிய போகிறது? வருண்குமார் பேச்சுக்கு சீமான் பதிலடி

சென்னை : ''எங்கள் மீது, என்.ஐ.ஏ., ரெய்டு நடத்தப்பட்டுள்ளது; நாங்கள் பிரிவினைவாத இயக்கமா, இல்லையா என, அந்த அமைப்புக்கு தெரியாதா,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

அவர் அளித்த பேட்டி:

நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம் என்றும், அக்கட்சியை கண்காணிக்க வேண்டும் என்றும், திருச்சி எஸ்.பி., வருண்குமார் கூறியுள்ளார். எதை வைத்து, அவர் பிரிவினைவாதம் என்கிறார் என்பது தெரியவில்லை. ரொம்ப நாட்களாக, எங்கள் கட்சியை அவர் கண்காணித்துக் கொண்டு தானே இருக்கிறார். இந்திய அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். 13 ஆண்டுகளாக, அரசியல் கட்சியாக நடத்துகிறோம். மக்கள் இயக்கம் இது. மக்களை சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். தேர்தல் கமிஷனே சின்னம் ஒதுக்கித் தந்துள்ளது. தமிழகத்தில், 36 லட்சம் ஓட்டுகள் வாங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். தனித்து போட்டியிட்டபோது அங்கீகாரம் பெற்றுள்ளோம். திடீரென பிரிவினைவாத இயக்கம் என்றும், அதை கண்காணிக்க வேண்டும் என்றால், வருண்குமார் தான் நாட்டை ஆளுகிறாரா? எங்கள் மீது ஏற்கனவே என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில், 'ரெய்டு' நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் பிரிவினைவாத இயக்கமா, இல்லையா என, அந்த அமைப்புக்கு தெரியாதா? அடிப்படை தகுதி இல்லாமல், வருண்குமார் பேசுகிறார். என் மொழி தமிழ். நான் தமிழில் பேசுவதால் தமிழ் இனவாதி என்றால், ஹிந்தி, சமஸ்கிருதம் படி என சொல்வது, இனவாதம் இல்லையா? 'உலக மொழிகளில் தமிழ் தொன்மையானது; மூத்த மொழி தமிழ், எங்கள் நாட்டில் இருப்பது பெருமை' என, பிரதமர் மோடி பேசுகிறார்.அது தமிழ் இனவாதம் தானா? 'ஹிந்தி மொழியின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம்' என்கிறாரே, அதுவும் தமிழ் இனவாதம் தானா? வருணுக்கு மட்டும் தான் மனைவி, பிள்ளைகள் உள்ளனரா; எங்களுக்கு இல்லையா? என் குடும்பத்தினரையும், கட்சி நிர்வாகிகளையும் அவர் இழிவாக பேசுகிறாரே. இதை அவர் நிறுத்த மாட்டாரா? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

செந்தில்குமார்
டிச 07, 2024 19:17

தமிழ் தேசியம் என்று சொன்னாலே பலருக்கு வயிறு எரியும். சுரண்டி தின்றே பழக்கப்பட்ட குரூப் அல்லவா


karupanasamy
டிச 06, 2024 09:58

டேய் விஜலெட்சமி அக்கா போய் வருண்குமாரிடம் ஒரு புகார் கொடுத்தால் போதும் உன்னை ... எடுத்துடுவாரு சாதாரண ஐபிஎஸ்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 06, 2024 09:53

வருண்குமார் போன்ற அதிகாரிகள் அந்த பதவிக்கே லாயக்கற்றவர்கள். தங்களது பதவி வெறிக்காக மதுவை ஊற்றிக் கொடுத்து, கஞ்சாவை கட்டிகொடுத்து மக்களை கொல்லுகின்ற இந்த திருட்டு கழகங்களின் அரச பயங்கரவாதத்தை கேள்வி எழுப்ப முடியாத தற்குறி, தனது கையாலாகாததனத்தை நாம் தமிழர் கட்சி மீது வெளிப்படுத்தியிருக்கிறார். இவனுக்கெல்லாம் பதில் சொல்லி நாம் தமிழர் கட்சியினர் தங்கள் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தனது பதவி இருக்கிற தைரியத்தில் ஆடும் இந்த கோழையின் ஆட்டம் அடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


VENKATASUBRAMANIAN
டிச 06, 2024 07:57

இவனை உள்ளே தள்ள வேண்டும். எத்தனை முறை தனி தமிழ் தேசியம் வேண்டும் என்று பேசியுள்ளான் அது பிரிவினைவாதம் இல்லையா. உளறுவாயன்.


Perumal Pillai
டிச 06, 2024 07:56

The illusionary concept of "saving Tamil" has become the last resort of various opportunists in Tamil Nadu since 1965. Original Tamils recognize that the language is not in danger however, some individuals with Telugu, Malayalam, or Kannada as their mother tongue engage in political maneuvers based on this imaginary threat. Whenever they face political challenges, they embark on a misguided quest to "save Tamil." Non-Tamils often make loud claims about protecting the language, while genuine Tamils show little interest in their manipulations and provocations.


சம்பா
டிச 06, 2024 07:33

இவன உள்ள தள்ள முடியலயே விடியலுக்கு


karthik
டிச 06, 2024 11:26

ஏன் சாமி சீமானை சிறையில் அடைக்கணும்? உங்களுக்கு அவரை பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அவர் கொடுத்த பேட்டியில் எந்த தவறான கருத்தையும் சொல்லவில்லை நேற்று மாறி பொறுக்கித்தனமாக பேசவில்லை. தேர்தல் தனிச்சிய போட்டி போடுறாங்க, பணம் கொடுப்பதில்லை, தமிழ்நாட்டை எவ்வாறு முன்னேற்றலாம்னு அவர் திட்டங்களை சொல்லறாரு.. உங்களுக்கு என்ன திராவிடிய மாறி ஊழல் ஆட்சி தான் வேணுமா? இல்லை அண்ணாமலை, சீமான் போன்ற மாறுபட்ட தலைவர்கள் வேண்டுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை