உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: வள்ளுவர் பற்றி வாயை திறக்காதீர்கள்!

இது உங்கள் இடம்: வள்ளுவர் பற்றி வாயை திறக்காதீர்கள்!

எஸ்.ராமகிருஷ்ணன். கே.கே.புதுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

திருவள்ளுவர், 'பாரத சனாதன தர்மத்தின் பிரகாசமான துறவி' என்று, கவர்னர் ரவி உயர்வாக கூறியது, திராவிட செம்மல்களை கொதிப்படைய வைத்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.திருக்குறளின் மேன்மையை, பிரதமர் மோடி, கவர்னர் ரவி போன்றோர் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு, திராவிடச் செம்மல்கள் அறிந்திருப்பரா என்பது சந்தேகமே!பிரதமர் மோடி, திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்து வருகிறார்; இன்று தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், 10 திருக்குறளையாவது அர்த்தத்துடன் சொல்வரா...?அதிலும், திருக்குறள் மீது இவர்களது ஆசான் ஈ.வெ.ரா. எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது உலகமே அறியும். 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவ பெருந்தகை, என்ன தோற்றத்தில் இருந்தார், எந்த நிறத்தில் உடையணிந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது; ஆனால், அவர் ஒரு ஹிந்து சனாதனவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.மனித குலம் உய்ய எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை வரையறுப்பது தான் சனாதனம்; இதைத்தான் வள்ளுவமும் வலியுறுத்துகிறது.திருக்குறள் முழுக்க முழுக்க ஹிந்து தர்மத்தையே போதிக்கிறது. குறளில் ஹிந்து மதம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஏனெனில், அவர் வாழ்ந்த காலத்தில், ஹிந்து மதம் மட்டுமே இருந்தது; ஆகையால் அதற்கு தனியான பெயர் இல்லை.ஹிந்து மதத்திற்கே உரித்தான, 'அந்தணர், மறுபிறப்பு, ஏழ் பிறப்பு...' என, நிறைய வார்த்தைகள் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் பிடித்தபடி, ஊரை ஏமாற்றும் திராவிட செம்மல்களுக்கு திருக்குறள் பொருந்தாது.ஏனெனில், முதல் அதிகாரத்தையே கடவுள் வாழ்த்துடன் தான் ஆரம்பிக்கிறார் திருவள்ளுவர்; கடவுள் இல்லை என்பவர்களுக்கு திருக்குறள் எப்படி பொருந்தும்?ஹிந்து தர்மத்தை போதிக்கும் ஞானிகள், மகான்கள், சித்த புருஷர்கள் அனைவரும் காவி உடுத்தி இருந்தனர்; அந்த மரபில் தான் வள்ளுவருக்கு காவி உடையும், திருநீறும், ருத்திராட்சமும் அணிவிக்கப்பட்டுள்ளன.வள்ளுவர் போதித்த இறைபக்தி, கள்ளுண்ணாமை, புலன் அடக்கம், புலால் மறுத்தல், பிறன்மனை நோக்காமை, சிற்றின்பம் சேராமை ஆகிய பண்புகள், இவர்களில் எத்தனை பேரிடம் உள்ளது? எனவே, திராவிட மாடல் ஆட்சியாளர்கள், வள்ளுவரை பற்றி வாய் திறவாமல் இருப்பது உத்தமம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

MADHAVAN
ஜன 22, 2024 11:47

பீ சப்பி சங்கிகளுக்கு தெரியாது,


Suppan
ஜன 22, 2024 13:24

உபிக்களுக்கு நாகரீகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தத் தெரியாது என்று தம்பட்டம் அடித்து சொல்கிறார்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 15:45

அவரவர் வாழ்நாளில் அதிகம் என்ன செயல் செய்கிறார்களோ அதுதானே நினைவுக்கு வரும் ??


J.Isaac
ஜன 22, 2024 11:03

வள்ளுவர் எந்த உடை உடுத்தியிருந்தால் என்ன,வள்ளுவர் சொன்னதை கடைப்பிடிந்திருந்தால் 80 % இந்துக்கள் வாழும் இந்தியாவில் சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவதில் ஒழுக்கம் இருக்குமே. பான் பராக் துப்புவது இருக்காதே.பில்லிசூனியம், மாந்திரீகம், செய்வினை செய்வது இருக்காதே. வெட்டி பேச்சு பேசுவது வீண்


Barakat Ali
ஜன 22, 2024 11:56

ஒழுக்கம், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் பிழைக்க வரும் பீகாரிகளின் செல்போன்களைத் திருடி மாட்டிக்கொண்டது ஒரு கும்பல் .... இது சமீபத்திய செய்தி ....


Nagendran,Erode
ஜன 22, 2024 12:54

இதெல்லாம் பாரவாயில்லை


spr
ஜன 22, 2024 08:10

"தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், 10 திருக்குறளையாவது அர்த்தத்துடன் சொல்வரா...?." இந்தக் கேள்விக்கு திமுக குடும்பம் மட்டுமல்ல இலக்கிய உரை நிகழ்த்தும் எவருமே விடை சொல்ல முடியாது. இந்தக் கேள்வியை மோடியிடம் எவரும் கேட்டதில்லையே தமிழ் மற்றும் இறைவனைப் போலவே திருவள்ளுவரும் கழகத்திற்கு மட்டுமல்ல மோடி உட்பட அனைவருக்கும் தமிழக மக்களை மூளை சலவை செய்யக் கிடைத்த ஒரு விளம்பர பொருளே. எப்படி, இறைவன் மற்றும் மோடியை எதிர்த்து ஒரு கருத்து கூறினால் அது செய்தியாகப் பரவுகிறதோ, விவாதப் பொருளாகிறதோ அது போலத்தான் தமிழ், மற்றும் திருவள்ளுவraiyum அவர் எழுதிய திருக்குறளை ஆதரித்துச் சொல்லப்படும் கருத்துகளும் பேசு பொருளாகும் அதனை அறிந்தே கழகம் மட்டுமல்ல, மோடியும் தமிழ் திருக்குறள் என்றெல்லாம் பேசுகிறார் திருக்குறள் ஒரு அறநெறி நூல் நாலடியார், நான்மணிக்கோவை ஆத்திச் சூடி போன்ற பல சொல்லிய அறநெறிகளை சுருக்கமாக விளக்கியது திருக்குறள் அவ்வளவே அதனைவிட இலக்கிய வளம் மிக்க அகம் புறம் பேசும் பல படைப்புக்கள் தமிழில் உள்ளனவே எவரும் பேசுவதில்லையே முதலிரண்டு பால்களும் அவர்களால் கடைப்பிடிக்க இயலாத பல செய்திகளை சொல்வதால், கழக அரசுக்கு மூன்றாம் பால் மட்டுமே திருக்குறள் அது கூட அவர்களால் முழுமையாக விளக்க முடியாத ஒன்று ஏனெனில் அடிப்படையிலேயே "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற சொற்றிறம்பாமை இருப்பவரால் மட்டுமே அதனை ரசிக்க முடியும், விளக்க முடியும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 11:10

திருவள்ளுவர், ஆரியம், திராவிடம், பிராம்மண எதிர்ப்பு இப்படியெல்லாம் பேசி தமிழனை மூளைச்சலவை செய்து வந்தது தேசியத்தில் நம்பிக்கை அற்ற ஒரு தேசவிரோத கூட்டம் ...... அந்தக் கும்பலையும் தேசியம், பக்தி, நாட்டுப்பற்று, ஒற்றுமை, மதங்களில் சம பார்வை என்று செயல்படும் ஒரு இயக்கத்தையும் நீங்கள் ஒரே விதமாகப் பார்க்கிறீர்கள் என்றால் கோளாறு உங்கள் பார்வையில்தான் ....


Barakat Ali
ஜன 22, 2024 11:52

எஸ்பிஆர் என்னும் இந்த அறிவாளி ஒரு விஷயத்த யோசிக்கணும் .... மோடி மற்றும் தமிழக கவர்னர் திருவள்ளுவர் பற்றியோ திருக்குறள் பற்றியோ பாராட்டி பேசும்பொழுது வீணர்கள் கூட்டம் ஓலமிடுகிறது ..... அது ஏன் ???? அதைப்பற்றி இவர்கள் தான் பேசவேண்டுமா ?? .... அதென்ன பாஜக மட்டும்தான் ஓட்டுக்காக வள்ளுவம் பேசுமா ?? மற்றவர்களுக்கு நிசம்மாவே தமிழ் உணர்வு உண்டா ??


Godyes
ஜன 22, 2024 07:28

.இது தான் திராவிட பகுத்தறிவு.


Kasimani Baskaran
ஜன 22, 2024 06:05

இராம்சாமியை விட்டால் தீம்காவுக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது - அனைத்தும் எங்காவது திருடப்ப்படவை. திருக்குறளை தொட்டால் சிக்கல்தான் வருமேயல்லாமல் தீம்காவுக்கு சுபிட்சம் வரப்போவது இல்லை.


Kasimani Baskaran
ஜன 22, 2024 05:48

திருக்குறளுக்கும் திராவிடத்துக்கும் காத தூரம் என்பது ராம்சாமிக்கு நன்கு தெரியும். ஆனால் அதைப்புரிந்து கொள்ளாமல் திருவள்ளுவரை த்தீம்காவினர் அபகரித்து வெள்ளையடித்து விட்டார்கள். சான்றோர் பலர் திருக்குறளை ஆய்வு செய்யும் பொழுது திராவிட முரண்பாடுகள் அப்பட்டமாகத்தெரியும். இப்பொழுது 'குத்துதே குடையுதே' தருணம்... இன்னும் வரும்.


வெகுளி
ஜன 22, 2024 05:40

செல்லாது.... செல்லாது.... ஈ.வே.ரா. மட்டும் இல்லையின்னா வள்ளுவரால் திருக்குறள் எழுதியிருக்க முடியுமா?... வள்ளுவருக்கு சுருக்கெழுத்து மற்றும் டைப்பு அடிக்க கற்றுக்கொடுத்ததே அப்ப மெரினா பீச்சில் வாக்கிங் போன ஒரு அயல்நாட்டு சீடர்தான்..


கிருஷ்ணன்_பொள்ளாச்சி
ஜன 22, 2024 04:41

அதிலும் குறிப்பாக பிறன்மனை நோக்காதே என்பது இங்கு வாழ்ந்த ஒருவருக்கு சற்றும் சம்பந்தபட்ட சொல் அல்ல என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும்


Kasimani Baskaran
ஜன 22, 2024 06:02

இவர்கள் திராவிடத்திருமண முறையில் ஒருவருக்கு இரண்டு பெண்டாட்டியை கட்டிவைத்துத்தான் புரட்சி செய்தார்களாம்... மானங்கெட்டதுகள்...


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 11:12

ஒன்றுக்கு மேல் இருந்தால்தான் ஆண்மை என்று கருதப்பட்டது கழகக் கண்மணிகள் மத்தியில் .... அதாவது ஒழுக்கக் கேட்டையே கவுரவமாக நினைக்கும் விபரீதம் ..... ஒழுக்கம் பற்றி வாய் ஓயாமல் பேசும் மூர்க்கர்கள்தான் இந்தக் கும்பலின் தலையாய அடிமைகள் .....


Barakat Ali
ஜன 22, 2024 11:53

அருவருப்பானது டீம்கா கும்பல் .....


தமிழ்வேள்
ஜன 22, 2024 14:07

திராவிடிய தலைவர்களின் சொந்த வாழ்க்கை இதை நிரூபிக்கும் ..


Rajarajan
ஜன 22, 2024 04:10

திராவிட செம்மல்கள் கொந்தளிக்கவேண்டியது, இவர்களது ராஜகுரு ராமசாமி மீதுதான். அவர் தானே, திருக்குறளை மிக மிக கேவலமாக வசைபாடியவர். ஆனால், இதுபற்றி எந்த திராவிட தலைவர்களும், அவர்களது அடிபொடிகளும் வாய் திறக்காதது ஆச்சர்யமாக உள்ளது. செம அடியோ ??


Krish
ஜன 22, 2024 03:07

These useless DMK and their family politicians will only know to concentrate on the superficial aspects like how to dress and denote Thiruvallur. They dont have the knowledge and maturity to understand or follow the concept of what Thirukural actually means and educates. Their leader doesnt even know to properly read what has been scripted in Tamil and given to read during his speeches. The day these useless family and this party is eradicated by TN public by denying them any vote is the day, we the people of TN will be able to truly unite and develop as a state.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை