உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனக்கே கூட வாய்ப்பில்லாமல் போகலாம்; அமைச்சர் பொன்முடி சொல்ல வருவது என்ன? விறுவிறுப்பான விவாதம்

எனக்கே கூட வாய்ப்பில்லாமல் போகலாம்; அமைச்சர் பொன்முடி சொல்ல வருவது என்ன? விறுவிறுப்பான விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். சமீபத்தில், பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறை பறிக்கப்பட்டு, வனத்துறை வழங்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u3pgsg76&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். ஆனால், தலைவர் ஸ்டாலின் யாரை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்காக நீங்கள் உழைக்க வேண்டும்” என்றார். இது குறித்து விவாதம் நடந்தது.'2026ல் சீட் தர மாட்டாங்க! தி.மு.க., சீனியர்களுக்கு பொன்முடி வழியாக மெசேஜ் தரப்பட்டதா', பின்னணி என்ன என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 19, 2024 21:18

என்ன பேசி புலம்பி என்ன பயன்? சொரணை இல்லாத ஹிந்துக்கள் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் 2000 ரூபாய்க்கும் மயங்கி திரும்ப இதே திருடர்களுக்கு தான் வோட்டை போடப்போகிறார்கள் என்ற நம்பிக்கைதான்.


வாய்ப்பு கேட்கும் தமிழன்
அக் 19, 2024 17:06

இதுவரைக்கும் அடிச்சதை வெச்சு எட்டு தலை முறை சாப்புடலாம். அடுத்து வர்ரவனுக்கு அடிக்க வாய்ப்பு குடுங்க.


ஆரூர் ரங்
அக் 19, 2024 16:40

பொன்முடிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தால் தமிழக போலீஸ் அப்பீல் செய்ய வாய்ப்பில்லை என்பது நீதிபதிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும். அது போதாதென்று அவரை கவர்னர் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க நீதிபதிகள் அழுத்தமாகச் கூறியபோது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏன் அப்பீல் செய்யவில்லை இன்றுவரை கோர்ட் கேள்வியெழுப்பவில்லை. ஏதோ பாதாளம் வரை பாய்ந்துவிட்டதா?. அப்படிப்பட்ட திறமைசாலி பொன்முடிக்கா டிக்கெட் கிடைக்காது? நம்பவே கஷ்டமாக இருக்கிறது.


Raghavan
அக் 19, 2024 15:35

ஏற்கனேவே தீர்ப்பு வந்து தண்டனையும் கொடுத்தாச்சு. எவ்வளவு காசு பணம் துட்டு விளையாடித்தோ அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பதவியையும் ராஜினாமா செய்தாகி உள்ளே போவதற்கு ரெடியாகத்தான் இருந்தார். மேல் கோர்ட் தயவால் மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார். இப்போது இலாக்காவும் மாறியாச்சு. பையனையம் ஒருவழியா செட்டில் பண்ணியாச்சு. இருக்கிறதை வைத்துக்கொண்டு இன்னும் ஒரு 10 அல்லது 15 தலைமுறைக்கு கவலை இல்லமால் இருக்கலாம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 19, 2024 15:15

அதே அமைச்சர்கள், MLA க்களைதிமுக நிறுத்தினாலும் வாசகர்கள் கூவுகிறார்கள். புது முகங்களுக்கு வாய்ப்பு என்றாலும் கூவுகிறார்கள். நல்ல டைம் பாஸ் பா....


Sivagiri
அக் 19, 2024 13:08

அதாவது , வெளியே தெரியாமல் , எல்லா மந்திரிகளும் , எம் எல் ஏ , எம்பிக்கள் , வாரியங்கள் , மாவட்டங்கள் , எல்லாரும் , அவர்கள் வாரிசுகளுக்கு , சீட்டுகள் , பதவிகள் , ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டாங்க , தீமுகாவில் கிடைக்குதான்னு பாப்பாங்க , இல்லையா , ஆதிமுக , பாஜக, இல்லேனா பாமக-விலாவது , வேலை வாங்கி கொடுத்திடறாங்க , கான்டராக்டர்கள் அவர்கள் வாரிசுகளை இறக்கி விடறாங்க , ஆனா இந்த விஷயம் தெரியாம தொண்டர்கள் , பப்பரப்பா-ன்னு முழிக்கிறாங்க . . .


karthik
அக் 19, 2024 12:28

ஆமா வெளியில் இருந்தா தானே .... தீர்ப்பு வந்துவிடும்


raja
அக் 19, 2024 12:00

அதாவது இனி கட்சிக்கு முதல்வர் பதவிக்கு வாரிசு உதவா நிதி போல் விழுப்புரம் மாவட்டம் இவரின் வாரிசுக்கு போல ஒவ்வொரு வாரிசும் களம் இறங்க போராங்கன்னு சொல்றார் ...


RAJ
அக் 19, 2024 10:53

ஆமாம் .. விழுப்புரம் மாவட்டத்தை நிமித்திட்டாரு... இன்னும் ஒருமுறை சீட்டு குடுங்க.. பஸ் ஸ்டாண்டு பாக்கி இருக்கு.. ஓசி ...ஓசி..ஓசி


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 19, 2024 10:29

தலைமை குடும்பத்துக்கு ஒழுங்கா சம்பாரிச்சு கொடுத்திருந்தா வேற எந்த தப்பு செஞ்சிருந்தாலும் அது மன்னிக்கப்படும் .......


புதிய வீடியோ