உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை

திருக்கோவிலுார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, கனகனந்தலை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஜாகிதாபேகம், 37; இரு குழந்தைகள் உள்ளனர். கனகனந்த ல் கிராம உதவியாளரான ஜாகிதா பேகம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்து, நேற்று மாலை, 4:30 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டிலிருந்த ஊஞ்சல் சங்கிலியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார், ஜாகிதாபேகம் பணியின்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை