உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.,எஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இ.பி.,எஸ். வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை மட்டும் திமுக அரசு அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=scbfz3ns&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5ஆயிரம் வழங்க வேண்டும்.கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு கொள்முதலில் முறைகேட்டுக்கு இடம்தராமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.,எஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.Ramakrishnan
ஜன 04, 2024 19:42

தினம் ஒரு அறிக்கை வெ ளியிடாவிட்டால் தூக்கமே வராதோ?


venkatakrishna
ஜன 04, 2024 18:50

அதிமுக தலைவர் சொல்வது, திமுக ஆகிய நீங்கள் பொங்கல் தொகுப்பில் ரூ 1000/- கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம் என்று அர்த்தம்.


ஆரூர் ரங்
ஜன 04, 2024 14:40

ஏற்கனவே உரிமைத் தொகை 1000 கொடுக்கவே திணறல். எனவே மதசிறுபான்மையினர் நலன் காக்க அவர்களுக்கு மட்டும்???? பொங்கல் கொண்டாட 1000 வழங்க வாய்ப்புண்டு. ஆட்சியே அவங்க போட்ட பிச்சை தானே?


Kundalakesi
ஜன 04, 2024 14:36

தமிழகம் கடனில் தத்தளிக்கும் போது எதற்காக அரசு இலவசங்களை ஊக்குவிக்க வேண்டும்


saravan
ஜன 04, 2024 14:30

உங்களை ஐயாயிரம் கொடுக்கச்சொன்னவர்கள் அதனால எங்க வரிப்பணத்தில் இருந்து ஐயாயிரம் கொடுங்கள்...


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜன 04, 2024 14:25

எடப்பாடி ஆட்சியில் பொங்கலுக்கு அனைத்து பொருட்களுடன் சேர்ந்து 2000 ரூபாய் தர வேண்டும் என்று அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் போராட்டம் ஆர்ப்பாட்டம் பண்ணினார் ஆனால் இப்போது திமுக ஆளும்கட்சியாகி ஸ்டாலின் முதல்வர் ஆன பின்பும் திமுகவின் பங்காளியான எடப்பாடி வெறும் ஆயிரம் ரூபாய்தான் தர வேண்டும் என்று வாய் வார்த்தையாக கூறுகிறார் அப்படி என்றால் இரண்டு பங்காளிகளுக்கும் உள்ள அன்டர்ஸ்டாண்டிகை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த இரண்டு மறைமுக கூட்டாளி மட்டைகளுக்கும் ஒரே எதிரி பாஜகதான் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை