உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆஜராக உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆஜராக உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உட்பட 27 பேர் செப்.,9 ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஆக 02, 2024 16:39

'இன்று நீ, நாளை நான்' இந்த ஆட்சி முடிந்து அடுத்தவர் வந்தால் இன்றைய ஊழல் மன்னர்கள்/ ராணிகள் வருவர் ஆனால் எந்த வழக்கும் முடிந்து, எந்த மாஜியோ இந்நாளோ சிறைக்குப்போனதாகவோ, ஊழல் பணம், சொத்து அரசுக்கு மாறியதாகவோ சரித்திரமே இல்லை - ஜெயலலிதா தவிர வழக்குகள் முடியும் முன்பே பலர் பரலோகம் சென்றுவிடுவதால் மக்கள் பணம். பொருள் போனது போனதுதான்


RAAJ68
ஆக 02, 2024 14:38

பலவீனமான மத்திய அரசால் திமுகவை அசைக்க முடியவில்லை.


RAAJ68
ஆக 02, 2024 14:20

கர்மம் தன் கடமையைச் செய்யும். அண்ணா திமுக திமுக இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த உலகமே போற்றும் கிரிமினல்கள் நிறைந்த கட்சி. , .கொரோனா காலங்களில் ப்ளீச்சிங் பவுடரில் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல் எதைத்தான் சொல்வது. ரமணா என்பவர் பதிவு துறையில் அமைச்சர் கோடி கோடியாக கொள்ளையடிததார். விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளில் இருந்து கோடி கோடியாக வசூலித்தார். இப்போது மா சுப்பிரமணியனும் மூர்த்தியும் அதே துறைகளில் கொள்ளையோ கொள்ளை அடித்துக் கொண்டுள்ளனர். மா மூர்த்தி நடத்திய ஆடம்பர திருமணத்திற்கு 500 கோடி ரூபாய் செலவழித்தது எல்லோருக்கும் தெரியும் தினம்தோறும் கோடிகளில் கொள்ளை அடிக்கின்றனர் எனவே இவர்களுக்கு இப்போது தண்டனை கிடைக்காவிட்டாலும் ஆட்சி போன பின் கர்மம் தன் கடமையைச் செய்யும்.


Ramesh Sargam
ஆக 02, 2024 13:22

எல்லோரும் நல்லவரே - கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தமிழகத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள், அயோக்கியர்களே...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை