சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.,23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும். இன்று (நவ.,22) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை (நவ.,23)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் நாளை (நவ.,23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நவம்பர் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி* தூத்துக்குடி* தென்காசி* விருதுநகர்* ராமநாதபுரம்* புதுக்கோட்டை* தஞ்சாவூர்* திருவாரூர்* நாகப்பட்டினம்* மயிலாடுதுறை நவம்பர் 25ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.