உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் வெற்றிமாறன், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ‛பேட் கேர்ள்'. இந்த படத்தை வர்ஷா பரத் என்பவர் இயக்கி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டபோது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதில், டீன்ஏஜ் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் விதமாக இந்த டீசர் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ‛யுஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இந்த நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த பேட் கேர்ள் படம் சம்பந்தமாக தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த டீசரில் சிறுவர் சிறுமிகள் குறித்தான ஆபாச காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுள்ளது. அதனால் சோசியல் மீடியாவில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி படம் திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankaranarayanan
ஜூலை 20, 2025 21:01

மக்களின் பல மாறான கருத்துக்களின் விளைவாக இந்தப்படத்தை உச்ச நீதி மன்றமே முன் வந்து தடை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த படம் சமுதாயத்தில் ஒரு கொந்தளிப்பை உண்டாக்கும். பிறகு கட்டுப்படுத்தவே முடியாது. யாரையும் எந்த சமுதாயத்தினரையும் பாதிக்காத வண்ணம் எடுக்கும் படங்களை மட்டும் சென்சார் போர்டு திரையிட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் உச்ச நீதி மன்றமே முன் வந்து அதற்கு தடை விதிக்க வேண்டும். சென்சார் போர்டு அனுமதி பெற்றதால் ஒரு படம் மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதை நிச்சயம் தடை செய்தே ஆகவேண்டும். சென்சார் போர்டு எல்லாம் வல்ல உச்ச நீதி மன்றமல்ல அல்ல அல்ல...


மூர்க்கன்
ஜூலை 21, 2025 12:08

கொயாபிளஸ்ல?? காஷ்மீர் பைல்ஸ் , கேரளா ஸ்டோரி அப்பல்லாம் எங்கே இருந்தீங்க??


hari
ஜூலை 20, 2025 20:25

இவர்களின் பகுத்தறிவு, மதச்சார்பின்மை பிராமண துவேஷம் என்ற புள்ளியில் தொடங்கி அங்கேயே முடியும். #அமரன்,#சூரரை போற்று#traffic ramaswamy


Oviya Vijay
ஜூலை 20, 2025 20:15

இந்த நியூஸ் பார்த்த பின்பு தான் அந்த படத்தின் டீசரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணமே வந்தது... இது தான் மீடியாவில் இருக்கும் பிரச்சனை... மக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த மாதிரி செய்திகளை பிரபலப்படுத்தாமல் இருப்பது தான் மீடியா இந்த சமூகத்துக்கு செய்யும் தொண்டு...


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 19:43

L முருகன் சென்சார் போர்டை கலைத்து விட்டு புதிய குழு அமைக்கத் தவறினால் தமிழ்நாடு முழுக்க சமூக விரோத மற்றும் பிரிவினைவாத சக்திகளின் கைக்குச் சென்றுவிடும்.


மூர்க்கன்
ஜூலை 21, 2025 12:10

மீன ராசிக்காரர் வேலைப்பளு அதிகமாம் ??


spr
ஜூலை 20, 2025 19:31

ஒரு வீட்டில் கழிப்பறை இருக்கும் ஆனால் அதுவே அன்றாடம் புழங்கும் அறையாக மாற முடியாது. உடலில் மலக்குடல் இருக்கிறது ஆனால் அதனை எந்நேரமும் எவரும் நினைத்து கொண்டிருப்பதில்லை. அருவருப்பு அடைவதில்லை சமுதாயத்தில் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் அறியாமையால் செய்யப்படும் சிறு குற்றங்கள் நிகழலாம்.அதனை பெரிது படுத்த தேவையில்லை ஆனால் ஊடகங்களும், திரைப்படங்களும் அதனை முன்னிலைப்படுத்தி அதுதான் அன்றாட வாழ்க்கை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள் விற்றுப் பயன் பெறுகிறார்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய் உண்மையென ஏற்கப்படுவதனைப் போல இளைய தலைமுறையினரால் இத்தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன "கண்டு கொள்ளாமல்" இருந்தால், அவை முக்கியத்துவம் பெறாது. திரைப்படங்களில் இப்பொழுதெல்லாம் குடிப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது எம்ஜியார் பொதுவாக அதனைத் தன படங்களில் முன்னிலைப்படுத்தியதில்லை ஆனால், சமுதாய பொறுப்புள்ளவர்கள் போல வசனம் பேசும் இன்றைய அனைத்து முன்னணி நடிகரும் இதனை எதிர்ப்பதில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 19:28

[சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால்] ......... போர்டு மெம்பர்களில் யாருக்கும் பதின்ம வயதில் வாரிசுகள் இல்லீங்களா ??


மூர்க்கன்
ஜூலை 21, 2025 12:09

நாற்பதை கடந்த பிள்ளைகள்தான் இருக்காம்.


V Venkatachalam
ஜூலை 20, 2025 19:19

சென்ஸார் போர்டு என்பது நல்ல விஷயங்களை திரையில் காட்சிப்படுத்த தடை விதிப்பது.. சென்ஸார் போர்டு நடிகர் விஷாலிடம் ரூ ஆறு லட்சம், லஞ்சம் கேட்டதாக பேசி யிருக்கார். சென்ஸார் போர்டு திருட்டு தீயமுகவை விட கேவலமா போயிட்டுது.


சிட்டுக்குருவி
ஜூலை 20, 2025 19:06

சினிமா துறையினால் மக்களுக்கு நன்மையா அல்லது தீமையா என்ற விவாத காலம் மாறி சினிமாவால் மக்களுக்கு குறைந்த பாதிப்பா அல்லது அதிக பாதிப்ப்பா என்ற விவாத காலம் ஆராம்பித்துவிட்டது . மக்கள் பொழுது போக்கிற்க்காக படம் எடுப்பது மாறி எதை வேண்டுமானாலும் பாடமாக எடுத்து பணம் பண்ணலாம் என்றாகிவிட்டது .சமூகத்திற்கு பொறுப்பான ,சிந்தனையை தூண்டக்கூடிய ,நல்லொழுக்கத்தை போதிக்ககூடிய சினிமா டயரெக்டர் என்றால் பாக்கியராஜ் ஜெனெரேஷன் டயரெக்டர்களோடு முடிந்துவிடும். முன்பெல்லாம் சினிமாவில் சிறிது வன்முறை இருக்கும் .இப்போதெல்லாம் வன்முறையில் சிறிது சினிமா வைக்கின்றார்கள் .மக்களை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் .


வாய்மையே வெல்லும்
ஜூலை 20, 2025 18:59

சென்சார் போர்ட்டுக்கு திண்டுக்கல் பூட்டு யாராவது அனுப்பி அழகு பார்க்கவேண்டும் .. இவங்க இருந்தும் இல்லாத மாதிரி தான்.


என்றும் இந்தியன்
ஜூலை 20, 2025 18:56

"வெற்றி மாறன்" தயாரித்த இதை "வெட்டி மாறன்" தயாரித்த என்று படித்தால் சரியான அர்த்தம் வரும்


சமீபத்திய செய்தி