உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்

இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (2.2.2024 முதல் 8.2.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

கேது, சுக்கிரன், சூரியன், சனி நன்மையை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட வாழ்க்கை வளமாகும்.அசுவினி: உங்கள் நட்சத்திர நாதன் சஞ்சார நிலையால் எதிர்ப்பு விலகும், உடல்நிலை சீராகும், இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பதினொன்றாமிட சனியால் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஞாயிறு அன்று செயல்களில் கவனம் தேவை.பரணி: பாக்கிய ஸ்தானத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் சங்கடம் விலகும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். திங்கள் அன்று உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்டிருந்த முயற்சி இனி வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செவ்வாய் அன்று செயலில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: இரவு 8:49 மணி - 6.2.2024 அதிகாலை 3:35 மணி

ரிஷபம்

சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். லாப ராகுவால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். உங்கள் செயல் முன்னேற்றம் அளிக்கும். செவ்வாய் அன்று புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.ரோகிணி: லாப ஸ்தானத்தில் யோககாரகன் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். செயல்களால் முன்னேற்றம் தோன்றும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதன், வியாழன் அன்று சில நெருக்கடிகளை சந்திப்பீர்.மிருகசீரிடம் 1,2: புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு செயல்களில் வெற்றி காண்பீர். நில விற்பனையில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாழன் அன்று விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்: 6.2.2024 அதிகாலை 3:36 மணி - 8.2.2024 காலை 8:01 மணி

மிதுனம்

சனி, குரு நன்மைகளை வழங்குவர். பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் லாபநிலை உண்டாகும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். வியாழன் அன்று எதிர்பாராத சங்கடம் தோன்றி மறையும்.திருவாதிரை: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதாரத் தடை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுப செயல் உண்டாவதற்கான அறிகுறி தோன்றும். புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல் படுவதால் வியாபாரத்தில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும், ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். பாக்கிய சனியால் வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். தெய்வ அருள் உண்டாகும். வழக்கு சாதகமாகும்.

சந்திராஷ்டமம்: 8.2.2024 காலை 8:02 மணி - 10.2.2024 காலை 11:02 மணி

கடகம்

கேது நன்மைகளை வழங்குவார். சிவனை வழிபட சங்கடம் தீரும்.புனர்பூசம் 4: முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்கள் செயல் வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். வாரத்தின் முற்பகுதியில் பூமி காரகனால் உங்கள் முயற்சி லாபமாகும். செவ்வாய், புதனில் வழக்கு விவகாரம் சாதகமாகும்.பூசம்: பண வரவில் உண்டான இழுபறி நிலை மாறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். முயற்சி சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசு விவகாரங்களில் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம்: உங்கள் ராசிநாதனும், சகோதர ஸ்தான கேதுவும் வாரம் முழுவதும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். வரவு அதிகரிக்கும், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

சிம்மம்

சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன், குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு நலம் தரும்.மகம்: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனால் உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல்களில் லாபம் காண்பீர். நினைத்ததை சாதிப்பீர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூரம்: ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திரநாதனால் வரவு அதிகரிக்கும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். பாக்கிய குருவால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். முயற்சி முன்னேற்றம் தரும். உத்திரம் 1: இரண்டாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் ராகு சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கினாலும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், திங்கள் அன்று முதல் செவ்வாயும் உங்கள் செயல்களை லாபமாக்குவர். விருப்பம் நிறைவேறும். குருவின் பார்வைகளால் சங்கடம் நிவர்த்தியாகும்.

கன்னி

சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவர். சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.உத்திரம் 2,3,4: ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளும் பயமும் தோன்றும். ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் நிலையில் மாற்றத்தை உண்டாக்குவர். நட்புகளால் சில சங்கடம் தோன்றும். உங்கள் லாபாதிபதி சந்திரனால் வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.அஸ்தம்: ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.சித்திரை 1,2: ஜென்ம ராசிக்குள் கேது களத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் குடும்பத்தில் கலகம், பிரச்னை உண்டாகும். குடும்ப, தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். வரவு அதிகரிக்கும். உங்கள் முயற்சி நிறைவேறும்.

துலாம்

சுக்கிரன் புதன், ராகு, குரு நன்மையை வழங்குவர். துர்கையை வணங்கி வழிபட்டு வர வளம் கூடும்.சித்திரை 3,4: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். ஏழாமிட குருவால் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் செயல்களில் வேகம் உண்டாகும். மற்றவரால் செய்ய முடியாத வேலைகளை நீங்கள் செய்து முடிப்பீர். முயற்சி லாபமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதனின் அருளால் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும்.விசாகம் 1,2,3: மூன்றாமதிபதி குரு ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் லாபம் தோன்றும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். உத்தியோகஸ்தர் நிலை உயரும், ஆறாமிட ராகுவால் வழக்கு விவகாரம் சாதகமாகும். செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

சுக்கிரன், சூரியன், செவ்வாய், கேது, நன்மையை வழங்குவர். திருப்பரங்குன்றம் முருகனை வணங்க சங்கடம் தீரும்.விசாகம் 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் வருமானத்தை அள்ளித்தருவார். நிலையில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் போகும். திட்டமிட்ட செயல் வெற்றியாகும். உங்கள் ராசிநாதன் திங்கள் முதல் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெள்ளி அன்று வரவு செலவில் கவனம் அவசியம்.அனுஷம்: உங்கள் ஜீவனாதிபதி சூரியன் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் லாபம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். சனிக்கிழமை எதிர்பாராத செலவும் அலைச்சலும் ஏற்படும்.கேட்டை: உங்கள் ராசியாதிபதி திங்கள் முதல் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் தோன்றும். உங்கள் முயற்சி வெற்றியாகும். குருவின் பார்வைகளால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வீண்செலவு தோன்றும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

தனுசு

சுக்கிரன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.மூலம்: கடந்த வார சங்கடம் விலகும். சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் வெற்றியாகும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை நீங்கும். குருவின் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும்.பூராடம்: உங்கள் நட்சத்திரநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி நீங்கும். மூன்றாமிட சனியால் உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். குரு பகவானின் பார்வையால் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியம் நடைபெறும்.உத்திராடம் 1: கடந்த வாரத்தில் இருந்த சங்கடம் விலகும். சனி, குரு சஞ்சார நிலைகளில் உங்கள் செல்வாக்கு உயரும், எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் இருந்த பாதிப்பு விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

மகரம்

ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபட முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: கடந்த வாரத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மூன்றாமிட ராகு முயற்சிகளை வெற்றியாக்குவார். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.திருவோணம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சி முன்னேற்றம் தரும். குருவின் பார்வைகளால் மனதில் இருந்த சங்கடம் விலகும். வரவு அதிகரிக்கும். ஒரு செயலால் மற்றவர் மத்தியில் பெருமை அடைவீர்கள். இதுவரை தடைபட்ட செயல் இனி நடைபெற ஆரம்பிக்கும்.அவிட்டம் 1,2: உங்கள் செயலில் மாற்றம் ஏற்படும். அதனால் வருமானத்தில் இருந்த தடை விலகும். முயற்சி வெற்றியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். சொத்து விற்க, வாங்க மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

கும்பம்

சுக்கிரன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடம் தீர்க்கும்.அவிட்டம் 3,4: உங்கள் ராசிநாதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையாகும். லாப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.சதயம்: ராசிக்குள் சனி பகவான், இரண்டாமிடத்தில் ராகு, எட்டாமிடத்தில் கேது சஞ்சரித்தாலும் லாப ஸ்தானத்தில் ஞாயிறு வரை அங்காரகன் சஞ்சரிப்பதால் பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நன்மை உண்டாக்கும். குருவின் பார்வைகளால் எல்லாவற்றையும் சமாளிப்பீர். நண்பர் உதவியால் முயற்சி வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்களுடன் இருந்தவர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர். திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் மட்டும் நன்மை உண்டாகும். இரண்டாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பணவரவில் தடையும், குடும்பத்தில் குழப்பமும் ஏற்படும். அஷ்டம கேதுவால் வம்பு வழக்கு ஏற்படக்கூடும். சட்டத்திற்கு புறம்பான செயல்களைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

குரு, சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு முல்லை மலர் சார்த்தி வணங்கி வர நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் நிதானம் இருக்கும். யோசித்து செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும். ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் நண்பர்களுடன் சங்கடம் உண்டாகும். வெள்ளி அன்று நிதானமாக ஒரு நல்ல செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்.உத்திரட்டாதி: ராகு, கேது, சனியின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்றாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் நெருக்கடி விலகும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை நீங்கும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வெள்ளி அன்று உங்கள் செயல்களில் விழிப்புணர்வு தேவை.ரேவதி: விரய சனியால் செலவு அதிகரித்தாலும், பதினொன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், திங்கள்முதல் சஞ்சரிக்கும் செவ்வாயும் உங்கள் முயற்சிகளை வெற்றி ஆக்குவார்கள். இரண்டாமிட குருவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பண வரவு அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை செயல்களில் சங்கடம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்:1.2.2024 காலை 11:36 மணி - 3.2.2024 இரவு 8:48 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி