உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கையில் வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்: உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த்

இலங்கையில் வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்: உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கையின் வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்த போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டது.நம் அண்டை நாடான இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை முழுதும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

56 பேர் பலி

குறிப்பாக, தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 16 பேர் உயிருடன் புதைந்தனர். நுவரெலியாவில் நான்கு பேர் இறந்தனர். நாடு முழுதும் 56 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.நிலச்சரிவில், 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், 12,300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்து, சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உதவிக்கரம்

இந்நிலையில், வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்த போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டது. அவசரகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களைத் தவிர, மற்ற அனைத்து சேவைகளுக்கும் இன்று இலங்கை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ponssasi
நவ 28, 2025 15:52

மத்திய அரசுக்கு நன்றி, எல்லை தாண்டியதாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைபிடிக்கப்பட்டது இலங்கையில். அண்டை நாடு மட்டுமல்ல நட்புநாடும்கூட. இலங்கை மீனவர் விஷயத்தில் மனிதாபிமானமற்று நடந்துகொண்டது இன்று அவர்களுக்கு நாம் நினைவூட்ட கடமைப்பட்டவராகிறோம். தேவை ஏற்படின் பாதிக்கப்பட்டோரை இந்தியா அழைத்துவந்து தேவையான உதவிகள் செய்யவேண்டும். வெள்ளம் விடிந்தபின் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை