உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு: மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்

இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு: மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் ஜூன், 16ம் தேதி நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசிய 'வீடியோ' ஹிந்து அமைப்பினரிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கடந்த, 2ம் தேதி ஹிந்து மக்கள் கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஹிந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்தனர். அன்று இரவே ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.மறுநாள், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இதுவரை அவரை கைது செய்யாது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இச்சூழலில், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளதால் கைது நெருக்கடி அதிகரித்துள்ளது.ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் சர்ச் உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் அளித்த புகார் மனுவில், 'ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, ஹிந்து மத நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும், இரு மதத்தினரின் நல்லுறவை கெடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் கேவலமாக சித்தரித்துள்ளார். எங்கள் ஆலயத்தின் புனிதமான பலிபீடத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதால் எங்கள் திருச்சபை மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இவ்வாறு இரு மதத்தினரிடையே பிரிவினையை துாண்டும் வகையில் பேசிய பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஜோஸ்வா டேனியலிடம் கேட்டபோது, ''ஹிந்து - கிறிஸ்தவ மக்களிடம் பிரிவினையை துாண்டும் பிரின்ஸ் கால்வின் மீது, பேராயர் தீமோதி ரவீந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பேராயர் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் போராடுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

M Ramachandran
ஜூலை 05, 2024 12:30

அவருக்கு ஆட்சியாளர்களிடமும் அண்டர் கிரௌண்ட் கன்வெர்ட்டட் கிறிஸ்துவ ஆட்சியில் இருக்கும் பதவியாளர்களாலும் ஆசிர்வாதம் கிடைபதால் ஊரறிய ப்ரசங்கம் செய்கிறார் என்று கேள்வி


Barakat Ali
ஜூலை 05, 2024 12:05

உலகிலேயே, மிக மிக சிறுபான்மையினர் இனம் "சிதம்பரம் தீக்ஷிதர்கள்" தான். சிதம்பரம் தவிர வேறு ஊர்களில் இவட்கள் வம்சம் இல்லை. பிழைப்புக்கு ஓர் இருவர் இன்று போயிருக்கலாம். இன்று, மொத்தத்தில் சுமார் 350 குடும்பம் இருக்கலாம். இவர்கள் திருமணம் இந்த 350 குடும்பத்தில் மட்டுமே. தில்லை வாழ் அந்தணர் 3000 பேர், என்று தமிழ் இலக்கியம்களில் உள்ளது. இன்று 350 ஆக குறைந்து உள்ளது. அவர்கள் இன்றும் தனி சிகையுடன் தனி குடுமியுடன், கலாச்சாரம். பொதுவாக சிதம்பரம் கோவில் கைங்கர்யம் 5000 ஆண்டுகளாக பரம்பரை தொழில் மட்டுமே . வேறு வருமானம் பொதுவாக இல்லை. நடராஜரருக்காக தன் உயிரையும் கொடுப்பவர்கள். நக்கீரரை முதலில் மறுத்து, பின் அவர் மகிமைக்கு அடிபணிந்தவர்கள். திப்பு சுல்தான் சிதம்பரம் கோவிலை கொள்ளையடித்தப்போது எதிர்த்தவர்கள். பின் திப்பு இவர்கள் மகிமையால் தன் "சப்த ஹாரம்" என்ற தங்க மாலையை நடராஜருக்கு அளித்தான். வெளியேறினான். தங்கத்துக்கு தோஷம் இல்லை. இன்றும் இது இவர்கள் வசம் கோவிலில் உள்ளது. அரசர்கள் பூசித்த இவர்களை, அரசு இன்று காப்பாற்றுகிறதா? கசப்பான உண்மை. தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் புண்ணியம். ஒரே ஓரு கோவிலில் 350 அர்ச்சகர்கள், அரசு சம்பளம் இன்றி, at full dedication கோவில் கைங்கரயம். ஏழ்மைநிலையிலும், இவர்கள் வேத பாடசாலை கைங்கர்யமாக நடத்துகிறார்கள். சிதம்பரம் கோவில் 100% பக்த்தர்கள் donation இல் தான் நடக்கிறது. 5000 ஏக்கர் நிலம் போன இடம் தெரியவில்லை. இதே போல் திருச்செந்தூர் "முக்காணியர்" சுமார் 300 குடும்பம் உள்ளது. இனவர்கள் நிலையும் இதே போல் தான். இதை படிச்சிப்பாருங்க.. இவங்களை போயி ஆதிக்கஜாதி அப்படி இப்படி பொய் சொல்லிட்டு இன்னிக்கு ஆசியாவிலேயே பணக்காரக்குடும்பமா திருட்டு ரயிலில் வந்தவன் குடும்பமானதுதான் கொடுமை ....…


s sambath kumar
ஜூலை 05, 2024 12:52

உங்களை வணங்குகிறேன் இஸ்லாமியராக இருந்தபோதிலும் வெறுப்பு காட்டாமல் உண்மையை பேசியதற்கு. உண்மையான இஸ்லாமியர் நீங்களே. அல்லாஹ் உங்களை வாழ்விக்கட்டும்.


Svs Yaadum oore
ஜூலை 05, 2024 11:18

இவன் மதத்துக்காரனே இவனை பற்றி புகார் .....அவனுங்களுக்குளே நிறைய அடிதடி பிரச்சனை உண்டு .....அதற்கு காரணம் பங்கு பிரிப்பதில் உண்டதாகும் தகராறு .....வெள்ளைக்காரன் காலத்தில் நிறைய நிலம் சொத்துகள் இலவசமாக வாரி வழங்கப்பட்டது ....அதெல்லாம் இப்போது கொள்ளை ....


sambath kumar
ஜூலை 05, 2024 11:08

Useless shameless bastard porikki.these speeches are only because of boneless shameless idiotic central govt.that is in this MP election unable to get full majority on its own .timelay action-severe action only need of the hour.


Avudaiappan S
ஜூலை 05, 2024 10:59

இவங்க என்னங்க சிறுபான்மை.உலகிலுள்ள பெரிய மதத்தை சேர்ந்தவர்கள்.சிறுபான்மை என்ற பெயரில் எந்த சலுகையோ தயவு தாட்சண்யமோ காட்டக்கூடாது.நாட்டில் அனைவரும் சமம்.


ram
ஜூலை 05, 2024 10:56

இப்படியேய் இவர்கள் ஹிந்து மதத்தை கேவலமாக நடத்தினால், ஒரு நாள் ஹிந்து தீவிரவாதம் கண்டிப்பாக ஏற்படும் அப்போது ஓட்டு மொத்தமாக இவர்கள் காணாமல் போய் விடுவார்கள். எதற்கும் ஒரு பொறுமை உண்டு.


sridhar
ஜூலை 05, 2024 10:20

ஆட்சியில் இருப்போர் தரும் தைரியமும் ஆதரவும் தான் காரணம், கன்னியாகுமாரி பாதிரி ஒருவன் இந்திய மண்ணை மிதித்தால் சொறி சிரங்கு தான் வரும் என்று பேசினான் , ஹிந்து கடவுள்களை பழித்தான் , இன்னமும் அவன் சுதந்திராக தான் சுத்திக்கொண்டிருக்கிறான் . ஹிந்துக்களுக்கு சொரணை வரவே வராது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 05, 2024 10:11

மாற்று மதத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்தவனுக்கு வெள்ளாட்டுத்துறை அமைச்சரின் ஆசி அமோகமாகவே இருக்கிறது. தளபதியின் ஆசி கொஞ்சம் இருந்தால் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். இருப்பதோ வெள்ளாட்டுத்துறை அமைச்சரின் ஆசி . ஆகவே, எத்துணை பேர் எத்தனைவிதமான கருத்துக்களை வெளியீட்டாலும் இறுதியில் ஏவல் துறை ஒரு ஆணியையும் பிடுங்காது. அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளன.


Nagarajan D
ஜூலை 05, 2024 10:06

இவ்வளவு தவறுக்கும் நீதிமன்றங்களே காரணம்... சிறுபான்மையினரை திருப்தி படுத்த பெரும்பான்மையிரனரை கொடுமை செய்கிறது நமது நீதித்துறை.... இந்த விஷயத்தில் நீதிமன்றம் தானாக ஏன் முன் வந்து விசாரிக்க கூடாது ? இவனுங்க அரசியல் வாதிகளின் ஜாமீன் விசாரணைக்கும் சினிமா வெளியீட்டுக்கு கொடுக்கும் முன்னுரிமையும் வேறு எதற்கும் கொடுப்பதில்லை... இதை தவிர எந்த நீதிபதியாவது சரியான தீர்ப்பு தந்துவிட்டால் அதற்க்கு இடை கால தடை தருவானுங்க...


Indragandhi
ஜூலை 05, 2024 11:53

ஏன் இப்படி கெட்டுப் போய்விட்டீர்கள். ஒருவர்தான் கடவுள்.


Yes
ஜூலை 05, 2024 09:50

கிறித்து இமயமலை மகரிஷிகள் இடம் தீட்சிதை பெற்று வான்வழி சித்துக்களை நிகழ்த்தியவர்.அவரை கொன்றவர்களை விட்டு விட்டு அவர் பேரை வைத்து மங்களம் பாடி மதம் பெருக்க ஒரு கூட்டம்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ