உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஈரான்-இஸ்ரேலில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு, 'ஆபரேஷன் சிந்து ' மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.அதை தொடர்ந்து, தமிழக அரசு, இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.உதவி தேவைப்படுவோர் 011-24193300, 9289516712 ,எண்களிலும் இ-மெயில் முகவரி:tn.gov.in,gmail.comஆகிய முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ