உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கருணாநிதி பெயரா? அண்ணாமலை கண்டனம்

ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கருணாநிதி பெயரா? அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:''மதுரை மாவட்டம், கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்து உள்ளது. அங்கு செல்ல யாரும் தயாராக இல்லை. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவதை கண்டிக்கிறோம். அம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்,'' என, மதுரையில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தயாராக இல்லை

பா.ஜ., ஒருங்கிணைந்த அணிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடந்தது. அக்கூட்டத்துக்குப் பின் அண்ணாமலை கூறியதாவது:ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், பாலமேடு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் இடம் பெறாத, சம்பந்தமே இல்லாமல் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.அங்கு செல்ல ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் தயாராக இல்லை.அம்மைதானத்தை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டுவர சிந்திக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தது, தி.மு.க., - காங்., கூட்டணியாக இருந்த மத்திய அரசு.அதே ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணம் பிரதமர் மோடிதான்.பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. புரோக்கர்கள் லாபி செய்கின்றனர்.இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம். பத்திரப் பதிவுத்துறையில் ரெய்டு நடத்தினால் தமிழகத்தின் கடனை அடைத்துவிட முடியும்.சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதில் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது சந்தேகம் உள்ளதாக கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தோர் கூறினர். இவர்கள் இனி கட்சி நடத்துவதால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால், தி.மு.க.,வுடன் இணைந்துவிடலாம்; தி.மு.க.,என்ன செய்தாலும் ஜால்ரா அடிப்பது ஒன்றையே பிரதான பணியாக வைத்துள்ளனர். கொங்கு மண்டல பகுதியிலிருந்து, தமிழக அரசுக்கு 60 சதவீதம் வரி வருவாய் கிடைக்கிறது. அப்பகுதி மற்றும் மதுரைக்கு தி.மு.க., அரசு இதுவரை செய்தது என்ன? தமிழகத்தின் பல மாவட்டங்கள் பீஹாரைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளன.

தமிழ் பற்று

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இதுவரை தமிழகத்துக்கு தொழில் துவங்குவதற்காக எவ்வளவு முதலீடு வந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தமிழ் உணர்வு, பாசம் கொண்டவர்கள் தமிழர்கள் தான். ஆனால், குஜராத்தில் பிறந்த மோடி, தமிழ் பற்றுடன் உள்ளார். அதனால் அவரை தமிழர் என ஏன் சொல்லக்கூடாது. ஆந்திரா ஓங்கோலிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழர் என்று சொல்லிக் கொள்கின்றனர்.தி.மு.க., அமைச்சர்களில் 35 பேரில் எத்தனை பேரின் பூர்வீகம் தமிழகம் என்பதை அவர்கள் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Rajathi Rajan
ஜன 07, 2024 19:37

ஒண்ணா நம்பர் ஆரைக்கொட்டி, இப்படி இருந்தா என்ன பண்ணுவது....


Saran Muthusamy
ஜன 07, 2024 15:14

அண்ணாமலை நீங்கள் எப்போது நாம் தமிழர் கட்சியில் சேர்ந்திர்கள்.


ஆரூர் ரங்
ஜன 07, 2024 13:51

உலகப்புகழ் பெற்றவை. Ongole breed of cattle, Bos indicus, is in great demand as these cattle are commonly used in bull fights in Mexico and some parts of East - Africa due to their strength and aggressiveness.


Palanisamy T
ஜன 07, 2024 13:14

@ Sreedar - India. அண்ணாதுரை அவர்கள் என்ன தவறுகள் செய்தார், அவர் பெயரை அகற்றவேண்டுமென்றுச் சொல்கின்றீர்கள். அவர்க் காலத்தில் சென்னை மாநிலமாகயிருந்ததை மத்திய அரசின் அங்கீகாரத்த்தோடு தமிழ்நாடு என்றப் பெயராக மாற்றினாரே, அதற்க்காகவா? முதல்வர் அவர்கள் அண்ணாவின் பெயரையாவது வைத்து அவரை கெளரவிக்கவேண்டும். தமிழிக்கு சுதந்திர இந்திய நாட்டிற்கு அரும்பணிச் செய்தவர்கள் நிறைய இருக்கின்றனர்.


ஆரூர் ரங்
ஜன 07, 2024 13:46

ஆமா சின்ன வயசிலேயே டபுள் எம்ஏ படிச்சி பேச்சுக்கு பொருள் கூறியவர்????.


Rpalnivelu
ஜன 07, 2024 12:31

//தி.மு.க., அமைச்சர்களில் 35 பேரில் எத்தனை பேரின் பூர்வீகம் தமிழகம் என்பதை அவர்கள் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்// அய்யகோ எல்லாமே ஓங்கோல் கும்பல்தானா இவனுங்கதான் தமில் தமில் என்று அலறிக் கொண்டிருக்கின்றனரா


Kumar
ஜன 07, 2024 12:31

இனிமேல் தமிழ்நாடு இல்லை கருணாநிதி நாடு.


g.s,rajan
ஜன 07, 2024 11:12

Kattumaram ....


முருகேசன்,சோளிங்கர்
ஜன 07, 2024 11:04

நான் தமிழர்களுக்கு எல்லாம் தமிழினத் தலைவன் ஆனால் என் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள மாவட்டம் சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழர்கள் இதை நம்பணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 09:29

எங்கொப்பன் வீட்டு மைதானம் .......... அதனால அவரு பேரையே வெச்சுட்டேன் ...... இப்படிக்கு விடியல் ....... ஆர் யு ஸ்யூர் ? பேராசிரியரின் அருமை பெருமை தெரிந்த மக்கள் குறும்பு கேள்வி .....


வாழ்க தமிழ் , வளர்க பாரதம்.
ஜன 07, 2024 12:51

ஆர் யு ஸ்யூர் ? தமிழ்


RAMAKRISHNAN NATESAN
ஜன 07, 2024 09:13

திமுக இப்படிச் செய்வது புதிதா என்ன ???? ......


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ