உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., மகள் பாக்டீரியா தொற்றால் உயிரிழப்பு

மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., மகள் பாக்டீரியா தொற்றால் உயிரிழப்பு

கோவை: மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி - டாக்டர் சின்னுசாமி ஆகியோரின் மகள் கருணாம்பிகா, 54. இவரது கணவர் 'ஆற்றல்' அசோக்குமார், பல நாடுகளிலும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர். கடந்த லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். கருணாம்பிகா - அசோக்குமார் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சமீப காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.கருணாம்பிகா, 'தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல்' குழுமத்தின் இணை நிறுவனர். இந்திய கட்டடக்கலை நிறுவன கோவை மைய துணைத்தலைவராக இருந்தார். அண்ணா பல்கலையில், கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் தொடர்பான கல்வியில், தங்கப்பதக்கம் வென்ற இவர், அமெரிக்காவின் பால் ஸ்டேட் பல்கலையில் கட்டடக்கலையில், முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.சில நாட்களுக்கு முன், இவருக்கு அரியவகை பாக்டீரியா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், பல உறுப்புகள் செயல் இழந்ததோடு, 36 மணி நேரத்துக்குள் தொற்று வேகமாக பரவி, நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
ஜூன் 07, 2025 18:57

டாக்டர் ,அரசியல்வாதி,பள்ளி நடத்துபவர் ,படிப்பாளர் - ஆனால் உண்கின்ற உணவு மட்டும் விலை உயர்ந்தது என்றால் அந்த விலைக்கு நஞ்சு கலந்திருக்கும் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லும் செய்தி இது. ஆன்மா சாந்தி அடையட்டும்.


Elango S
ஜூன் 05, 2025 19:03

ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றொருவர் அதிமுக கட்சி எப்படியோ அரசியல் பதவி அதன் செல்வாக்கில் கல்வி நிறுவனங்கள் அதில் கொள்ளைகள் ஆனால் இறப்பை யார் வெல்லுவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை