உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சட்டங்களின் பெயர்கள்: ஐகோர்ட் நீதிபதி

ஹிந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் சட்டங்களின் பெயர்கள்: ஐகோர்ட் நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனக்கு ஹிந்தி தெரியாது என்பதால் மூன்று புதிய சட்டங்களின் பெயரையும் ஆங்கிலத்திலேயே தொடர்ந்து குறிப்பிடுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.கடந்த 75 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா பாரதிய சாக் ஷிய சன்ஹிதா என்ற பெயர்களில் புதிதாக சட்டங்கள் பார்லிமென்ட்டில் இயற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்தப் புதிய சட்டங்கள் இன்னும் அமலுக்கு வரவில்லை.இந்நிலையில் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது. ஒரு குற்ற வழக்கை விசாரணைக்கு எடுக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு தொடர்பாக எழுப்பப்பட்ட சட்டப்பூர்வ கேள்விக்கு விடை காண வழக்கறிஞர்கள் உதவும்படி நீதிபதி கேட்டார்.நீதிமன்றத்தில் இருந்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் வழக்கறிஞர்கள் திருவேங்கடம் முகமது ரியாஸ் ஆகியோர் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தெரிவித்தனர்.அப்போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் புதிய சட்டத்தை பார்க்கும்படி குற்றவியல் நடைமுறை சட்டத்தை குறிப்பிட்டார். உடனே நீதிபதி புதிய சட்டத்தின் பெயர் என்ன என்று கேட்டபோது ஹிந்தி மொழியில் பெயர் மாற்றப்பட்ட சட்டத்தை உச்சரிப்பதற்கு அரசு வழக்கறிஞர் சிரமப்பட்டார். இதை கவனித்த நீதிபதி புத்திசாலித்தனமாக புதிய சட்டம் என அரசு வழக்கறிஞர் தெரிவித்து விட்டார் என்றார். அதனால் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ''எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால் மூன்று குற்றவியல் சட்டங்களையும் ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

நரேந்திர பாரதி
ஜன 25, 2024 16:18

சட்டப் பெயர்களை தமிழாக்கம் செய்யலாமே


Nalla
ஜன 25, 2024 14:59

தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே சட்டம் இருக்கவேண்டும், சுப்ரிம் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கறிஜர்கள், தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும், இதுதான் தமிழரின் உரிமை -நல்லவன்


Venkataraman
ஜன 25, 2024 14:31

இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் படிப்பதாக கூறுவது தவறு. தமிழ் மட்டும்தான் தெரியும் அதனால் ஆங்கிலத்தில் படிக்க. மாட்டேன் என்று சொல்லலாமா? எனக்கு சட்டம் தெரியாததால் குற்றம் செய்தேன் என்றால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.


சண்முகம்
ஜன 25, 2024 12:45

சட்டம் பாமரனுக்கும் புரிய வேண்டும். தமிழில் சட்டம் தமிழில் வாதாடுதல் வேண்டும்.


A1Suresh
ஜன 25, 2024 12:20

“கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பதில் மொழியறிவும் அடக்கம்.


Sampath Kumar
ஜன 25, 2024 11:49

ஆங்கிலம் வேண்டாம் அது தொடர்பு மொழி இல்லை அனால் அதன் விஞ்ஞான அறிவு மட்டும் வேண்டும்


தமிழ்வேள்
ஜன 25, 2024 10:51

சிக்ஷா சம்ஹிதை , சாக்ஷி சம்ஹிதை , நியாய சம்ஹிதை - என்ற பெயர் எப்படி புரியாமல் போகும்? சாட்ச்சி ,சிட்ஸை ,நியாயம் என்பது வாயில் நுழையாமல் உள்ளதா? பவுத்த நூல்களும் சம்ஹிதை என்ற பெயரிலேயே அறியப்படுகின்றன ..திராவிட கும்பலுக்கு, நல்ல பெயர்கள் வாயில் நுழையாது, அதாவது நாக்கு புரண்டு கொடுக்காது என்று சொன்னால் ஒப்புக்கொள்ளலாம் .... திருப்புகழை தினசரி வாய்விட்டு நிதானமாக படித்தால், நாக்கு சரியாக புரண்டு கொடுத்து உச்சரிப்பு திருந்தி வரும் ....


MANI DELHI
ஜன 25, 2024 12:03

தமிழ்நாட்டில் திராவிடத்தை கட்டுமரத்தை எதிர்பவனுக்கு கூட வாயில் வசம்பை வைத்து தேய்த்தாலும் வராது. "ழ" என்ற சொல்லே வராதபோது நாக்கு எப்படி பிறழும். வேடிக்கை என்னவென்றால் சீர்திருத்தம் என்ற பெயரில் எவனுக்கு நாக்கை பிறழவிடாமல் செய்த கருணா மற்றும் ஸ் (வடமொழி எழுத்து) டாலின் போன்றவர்கள் "ழ" என்று சொல்வார்கள். ஏன் உதவாத நிதிகளுக்கும் அதே கதி தான். ஆகையால் இந்த வக்கீல் மற்றும் நீதிபதிகளுக்கும் வராது. அந்த அளவிற்கு சம்ஸ்க்ருத மற்றும் ஹிந்தி வெறுப்பு. யார் நாசமாய்ப்போனால் இவனுங்களுக்கு என்ன.


Venkatasubramanian krishnamurthy
ஜன 25, 2024 10:29

IPC என்பதை BNS என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில் என்ன மொழிப் பிரச்சினை வந்துவிடப் போகிறதென்று தெரியவில்லை.


அப்புசாமி
ஜன 25, 2024 09:42

வடக்கேருந்து இங்கே வேலைக்குன்வர்ரவங்க தமிழே தெரியாம வந்து.மூணே மாசத்திலே தமிழ் கத்துக்கிட்டு அசத்துறாங்க யுவர் ஆனர். அதே மாதிரி நாளும் முய்ணு மாசத்தில் இந்தி கத்துக்குட்டு சட்டங்களை இந்தில படிச்சு தீர்ப்பு சொல்லலாம். முயன்றால் முடியாததில்லை


ஆரூர் ரங்
ஜன 25, 2024 09:28

அம்பேத்கர் (யாருக்குமே தாய் மொழியல்லாத) சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க விரும்பினார். ஹிந்தி மட்டுமே என காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஆங்கிலம் அன்னிய மோகத்தை வளர்க்கும் அது வேண்டாம் என்றார்கள். ???? இப்போது அண்ணல் அம்பேத்கார் விரும்பியபடி இச்சட்டங்களின் பெயர்களாவது சமஸ்கிருதத்தில் இருப்பது சிறப்பு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை