உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏறுமுகத்தில் வெங்காயம், தக்காளி: மற்ற காய்கறிகளின் விலை சரிவு

ஏறுமுகத்தில் வெங்காயம், தக்காளி: மற்ற காய்கறிகளின் விலை சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெங்காயம், தக்காளி, உருளைகிழக்கு விலை அதிகரித்து வரும் நிலையில், மற்ற காய்கறிகளின் விலை படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.திருவள்ளூர், வேலுார், திண்டுக்கல், நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், காய்கறி சாகுபடி நடந்து வருகிறது. இவை மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லாததால், அண்டை மாநிலங்களில் இருந்து பலவகை காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.மஹாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் இருந்து, வெங்காயம், உருளைகிழங்கு விற்பனைக்கு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக, சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தது.தற்போது, அறுவடை துவங்கிய நிலையில், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், சவ்சவ், நுாக்கல், பாகற்காய், வெள்ளரி உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இவை கிலோ, 15 முதல் அதிகபட்சமாக 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.கேரட், பீட்ரூட், சேனைகிழங்கு, கோஸ் உள்ளிட்டவற்றின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இவை கிலோ, 50 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால், மார்க்கெட்டிற்கும், கடைகளுக்கும் நுகர்வோர் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Essma Exports
ஆக 20, 2024 09:45

இடைத்தரகர்கள் முறையை யாராலும் ஒழிக்க முடியாது காரணம் உற்பத்தி குறைவாக இருக்கும் போது விவசாயிகளை நேரடியாக உழவர் சந்தை மூலம் விற்கலாம் ஆனால் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது நேரடியாக விவசாயிகளினால் அனைத்து விதமான உற்பத்தி பொருட்களையும் விநியோகம் செய்ய முடியாது எடுத்துக்காட்டாக மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம் வெஸ்ட் பெங்கால் ஹரியானா போன்ற மாவட்டங்களில் விளையும் வெங்காயம் பூண்டு உருளைக்கிழங்கு அரிசி மற்றும் கோதுமைகள் அளவுக்கு அதிகமாக விளைந்து உள்ளதால் ஒரு விவசாயினால் இந்தியா முழுக்க அதன் தேவையை விநியோகம் செய்ய முடியாது உதாரணமாக மகாராஷ்டிராவில் ஒரு விவசாயி ஒரு சீசனில் குறைந்தது 100 முதல் 200 டன் வெங்காயம் உற்பத்தி செய்கிறார் அதன் ஆயுட்காலம் மிகக் குறைந்தபட்சம் 20 லிருந்து 30 நாட்கள் மட்டுமே அதேபோல் உருளைக்கிழங்கின் ஆயுட்காலம் 10 முதல் 20 நாட்கள் ஆகும் இந்த குறைந்தபட்ச நாட்களில் நேரடியாக விவசாயிகளினால் விநியோகம் செய்ய இயலாது இதுபோன்ற மிக அதிக உற்பத்தி உள்ள தானியங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை விநியோகம் செய்ய இடைத்தரகர்கள் மற்றும் கூட்டுறவு ஏல நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் என நிறுவனங்கள் மூலமாகவே விநியோகம் செய்ய முடியும் இதே நடைமுறைதான் உலகம் முழுக்க உள்ளது நீங்கள் முதலில் சப்ளையண்ட் டிமாண்ட் என்ன என்று கற்றுக் கொள்ளவும் இடைத்தரகர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் சப்ளை அண்ட் மேன் பாதிக்கப்படும் நீங்கள் சிறிய அளவில் மட்டும் யோசனை செய்யக்கூடாது உலக அளவில் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் முப்பத்து பொருட்களின் விநியோகம் திறன்கள் மற்றும் அது உபயோகிக்கப்படும் முறைகளையும் யோசனை செய்ய வேண்டும் அப்படி இடைக்கிறார்களோ மற்றும் விநியோகித்தர்களோ இல்லாமல் இருந்தால் குப்பத்து பொருட்கள் பாதிக்கு மேல் உபயோகம் இல்லாமல் வீணாகிக் செய்து விடும் மக்கள் பயனடையும் முடியாது கால் அடிக்கிறவர்களுக்கு சப்போர்ட் செய்யும் இடத்தில் பேசவில்லை இப்படி மற்றும் விநியோகம் முறைகளை வெகு விரைவாக செய்யும் பொருட்கள் அதை மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் கூறுகின்றேன்


Ramesh Sargam
ஆக 16, 2024 12:57

விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இடைத்தரகர்கள். ஒரு வேலையும் தெரியாமல், தெரிந்தாலும் கஷ்டப்பட்டு உழைக்க மனமில்லாமல், இப்படி விவசாயிகளுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் நடுவே புகுந்து, தனக்கு கிடைக்க வேண்டிய கமிசன் அதிகம் கிடைக்க, விலையேற்றுவது இவர்கள்தான். நாட்டில் இந்த இடைத்தரகர்கள் முறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும்


Dharmavaan
ஆக 16, 2024 10:23

விலை விவரம் இல்லை


K.SANTHANAM
ஆக 16, 2024 08:32

ஊட்டி உருளை கிலோ 100/, பெரிய வெங்காயம் கிலோ 70/ தக்காளி கிலோ 25 / இன்றைய விலை.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை