| ADDED : பிப் 22, 2024 02:22 AM
சென்னை:குடியிருப்பு மற்றும் வழக்கமான பிரிவின் கீழ் வரும் மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, மார்ச் 1 முதல், 'ஆன்லைன்' முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் வீடு, மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்குவோர், அதற்கான ஒப்புதல் பெற்ற பின், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும், இதுவரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தற்போது, அனைத்து வகை விண்ணப்பங்களையும், ஆன்லைன் முறையில் மட்டுமே பெறுவது என ரியல் எஸ்டேட் ஆணையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 1 முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.