உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களுடன் முதல்வர் முகாமில் 35 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு

மக்களுடன் முதல்வர் முகாமில் 35 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில், 35 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் தவித்த விவசாயி நிலத்திற்கு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வழியே, பட்டா மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா, மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், விவசாயி. இவர் 1988ம் ஆண்டு மாரிமுத்து என்பவரிடம், 21 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, பல ஆண்டுகளாக முயற்சித்தும் முடியவில்லை.கடந்த 2018 ஏப்ரல் 18ல், மக்கள் நேர்காணல் முகாம், மாங்குடியில் நடந்தது. அந்த முகாமில் பட்டா மாற்றம் கோரி மனு கொடுத்தார். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை. தற்போது முதல்வர் அறிவித்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், கடந்த மாதம் 20ம் தேதி மாங்குடி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.இம்முகாமிலும் உரிய ஆவணங்களுடன், பட்டா மாற்றம் கோரி சந்திரசேகரன் விண்ணப்பித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, நேற்றுமுன்தினம் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, கும்பகோணம் தாலுகா அலுவலகம் இணைய சேவை வழியே வெளியிடப்பட்டது. இது விவசாயி சந்திரசேகரனிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
பிப் 04, 2024 23:51

3 நாட்களில் தீர்வு காண முடியும் என்றால், 35ஆண்டுகளாக இந்த அரசு ஊழியர்கள் என்ன செய்தார்கள்? கிடப்பில் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரைக்கும் வேலையே செய்யாமல் தான் சம்பளம்,+ கிம்பளம் வாங்கினார்களா? தண்டச்சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களை களை எடுங்கள் முதல்வரே...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை