உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்

மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்

சென்னை: 'மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர், பொதுச்செயலருக்கு அடுத்த, அதிகாரம் மிக்கவர்கள் மாநில அமைப்பாளர்கள்தான். ஆண்டுதோறும் மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான், ஆர்.எஸ்.எஸ்., செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து செயல்படுத்தப்படும்.முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டம், கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில், டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, தமிழகத்தை சேர்ந்த மாநில அமைப்பாளர்கள் பிரஷோபகுமார், ஆறுமுகம், இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல், சமூக சூழல், சந்திக்கும் சவால்கள், சாதித்தவை குறித்து, மாநில அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், ஆப்பரேஷன் சிந்துார், நீடிக்கும் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.நுாற்றாண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை கிராமங்கள், வார்டுகள் அளவில் கொண்டுச் செல்ல, நாடெங்கும் 58,964 ஒன்றியங்கள், 44,055 நகரப் பகுதிகளில், ஹிந்து மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.பா.ஜ., ஆளும் மகாராஷ்டிராவில், பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கியது பெரும் சர்ச்சையானது. இதனால், இந்த முடிவை அம்மாநில பா.ஜ., அரசு கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, சிவசேனா மிகப்பெரிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரம் பிரிந்து கிடந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்களை இணைத்துள்ளது. மகாராஷ்டிரா விவகாரத்தை பா.ஜ.,வும், சங் பரிவார் அமைப்புகளும் பெரும் பின்னடைவாக பார்க்கின்றன.இதுகுறித்து, கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. அப்போது, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் பேசியுள்ளதாவது:ஆரம்ப காலம் தொட்டே ஹிந்து ஒற்றுமையை சிதைக்க, ஜாதி, மொழி பிரச்னையை நம் எதிரிகள் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதை எதிர்கொண்டுதான், கடந்த 100 ஆண்டுகளாக நாம் வளர்ந்திருக்கிறோம். ஆனால், ஜாதி, மொழி பிரச்னைகளை வைத்து, ஹிந்து ஒற்றுமையை அவ்வப்போது சிதைத்து வருகின்றனர். அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள், சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., நிலைப்பாடு. இதை மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும். அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மொழி பிரச்னையில் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், ஹிந்து ஒற்றுமையில் மட்டுமல்ல, தேச ஒற்றுமையிலும் பின்னடைவு ஏற்படும். இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
ஜூலை 10, 2025 17:57

நாங்கள் எங்கள் மதத்தை விட எங்கள் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் உங்கள் மத ஒற்றுமை என்ற பாச்சா இங்கு பலிக்காது!


sugadhan
ஜூலை 10, 2025 12:48

RSS பற்றி குறை கூறுகிறீர்கள். முதலில் அதைப்பற்றி புரிந்துகொண்டு பேசுங்கள். நான் RSS காரன் அல்ல என்றாலும் அதை பற்றி அறிந்தவன். RSS இல்லாமல் இருந்திருந்தால் இன்று கேரளத்தில் இந்துக்கள் என்ற மதமே இருடந்திருக்குமோ என்று தோன்றுகிறது. எதனை கொலைகள். better study and before இந்தியாவின் சாபமே இந்துக்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது. அரசியல்வாதிகள் இதை அறிந்து செயல்படுகிறார்கள் divide and rule policy நாம் ஒன்றுபடாமல் பாரதம் முன்னேறாது. காங்கிரஸ் கையில் நாம் மீண்டும் அடிமையாகி வாழவேண்டும். நமது தலைமுறை எப்படி வாழவேண்டும் என்று சிந்திக்கவும்


Krishnamoorthy
ஜூலை 10, 2025 11:42

நீ வேனே பாரத் மாதாவுக்கு ஜே சொல்லு. நான் பாரத அன்னை, பாரத தாய் வாழ்க என்று சொல்கிறேன். தமிழ் வாழ்க, தமிழ் தாய் வாழ்க


Krishnamoorthy
ஜூலை 10, 2025 11:36

பிரச்சனையே RSS தான்


GMM
ஜூலை 10, 2025 10:43

இந்தியாவிற்கு தேசிய கொடி, கீதம் உண்டு. தேசிய மொழி இல்லை. குடிமக்கள் படையில்லா மன்னவன் போல் வாழ்கின்றனர். 15 ஆண்டுகள் தான் ஆங்கில மொழி ஆதிக்கம். அலுவல் மொழி ஆங்கிலம், இந்தி. தேசிய மொழி எதுவும் இன்றுவரை இல்லை. அரை மொழி அறிவு அண்ணாவினால், இந்தி எதிர்ப்பு போராட்டம். தமிழை வளர்க்க முடியவில்லை. ஒற்றுமையை குறைத்து விட்டது. இந்தி அலுவல் மொழி . இந்தியை கட்டாயம் ஆக்க வேண்டாம். பிஜேபி மொழி பிரச்சனையில் சிக்க வேண்டாம்.


Krishnamoorthy
ஜூலை 10, 2025 11:34

தமிழ் மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும்.


Mettai* Tamil
ஜூலை 10, 2025 10:30

ஜாதி ,மொழி வெறி என பிரிந்து இருந்தால், ஹிந்து ஒற்றுமையில் மட்டுமல்ல, தேச ஒற்றுமையிலும் மீண்டும் பின்னடைவு ஏற்படும். முஸ்லிம்கள் அவர்களின் உட்பிரிவு, மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மதத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றாலும். .


Nethiadi
ஜூலை 10, 2025 10:27

சரியாக சொன்னீர்கள், இந்த நாடு கெட்டு குட்டிச்செவாரா போனதுக்கு காரணமே இந்த கூட்டம் தான்


P. SRINIVASAN
ஜூலை 10, 2025 09:20

பிரச்சனையே RSS தான். இந்த நாட்டில் நடக்கும் எல்லா மத பிரச்சனைக்கு RSS மற்றும் BJP தான் காரணம்..


Mettai* Tamil
ஜூலை 10, 2025 10:19

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே 1906ல், முதலில் முஸ்லீம் லீக் என்ற மதவாத கட்சி உருவானது. 1921 ல் வங்காளத்தில் நவகாளி கலவரம், கேரளாவில் மாப்ளா கலவரம் என நெறைய இடங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலான முஸ்லிம்கள், நாடு விடுதலையை விட பிரிவினையைத்தான் எதிர்பார்த்தார்கள். இந்த கொடுமைகளுக்கு பிறகு தான் RSS என்ற அமைப்பு 1925 ல் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியம் உருவானது


Krishnamoorthy
ஜூலை 10, 2025 12:06

ஆர்ய சமாஜம் 1875 ஆம் ஆண்டு பம்பாயில் மகரிஷி தயானந்தரால் இந்தியாவில் நிறுவப்பட்டது


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 12:38

ஆக படையெடுத்து கொள்ளை lயடிக்க வந்த முகலாயர், காலனி சுரண்டல் ஆதிக்கம் செய்த ஆங்கிலேய கிறித்தவர்கள் அல்ல என்கிறீர்களா? போய் பிள்ளைகளையாவது படிக்க வையுங்க.


venugopal s
ஜூலை 10, 2025 07:27

இப்போதாவது புரிந்ததே, இனிமேலாவது உங்கள் ஆட்களை மொழி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நாவடக்கத்துடன் இருக்கச் சொல்லுங்கள்!


V RAMASWAMY
ஜூலை 10, 2025 08:39

எப்பொழுதுமே எதையும் புரிந்து கொண்டு நாட்டின் மக்களின், தேச ஒற்றுமைக்கும் நல்லாட்சி புரிய பாடுபடுபவர்களை அரசியல் காரணங்களுக்காக தவறான முறையில் தீய திட்டங்களுடன் மக்களுக்கு துர்போதனை செய்பவர்கள் தான் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு கொள்ளையடிக்கும் கட்சிகள். இவர்களைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் தான் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும்.


guna
ஜூலை 10, 2025 09:10

உன் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரியுது


சண்முகம்
ஜூலை 10, 2025 06:03

தெளிவான சிந்தனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை