உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முஸ்லிம் கைதிகளை விடுவிக்ககோரி மதுரையில் ஆகஸ்டில் போராட்டம்: சீமான் அறிவிப்பு

முஸ்லிம் கைதிகளை விடுவிக்ககோரி மதுரையில் ஆகஸ்டில் போராட்டம்: சீமான் அறிவிப்பு

மதுரை : ''சிறையில் உள்ள 'போலீஸ்' பக்ருதீன் உட்பட மூவரை விடுவிக்ககோரி ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.மதுரையைச் சேர்ந்த 'போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் புழல் சிறையில் உள்ளனர். இவர்களை சந்திக்க குடும்பத்தினரை சிறை நிர்வாகம் அனுமதிக்காதநிலையில், சிறைக்குள் கொல்ல சதி நடப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். நேற்று மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் மூவரின் குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: மூவரும் விசாரணை கைதிகளாகவே 15 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். அவர்களை சிறையில் அடித்து சித்ரவதை செய்கிறார்கள். குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என முதல்வர் சொல்கிறார். அதற்காக சிறையிலேயே வைத்து பாதுகாப்பீர்களா. முஸ்லிம் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும். முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் நிறைவேற்றவில்லை. உடல்நிலை காரணம் கருதி விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு விட முடியாது என பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதை கண்டித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும். அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டால் சிறையை முற்றுகையிடுவோம். மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் நடந்தது போல் மற்ற மாநகராட்சியிலும் நடந்திருக்காது என்பது என்ன நிச்சயம். திருடர்களை அதிகாரத்தில் வைத்தால் திருடத்தான் செய்வார்கள். இவ்வாறு கூறினார்.இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் ரஹீம், முன்னாள் செயலாளர் ராஜா உசேன், ஜமாத் தலைவர் காஜா முகைதீன், செயலாளர் அக்பர்அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Anjaan Karuppu
ஜூலை 11, 2025 16:02

சீமான்டி செருப்படி வாங்குவது உறுதி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 11, 2025 09:27

சிறுபான்மை வாக்குகளைக் குறிவைக்காத கட்சிகளே இல்லை .......... இந்நிலை மிகவும் ஆபத்தானது ...... ஹிந்துக்கள் தொடர்ந்து உறக்கத்தில் ......


SENTHIL NATHAN
ஜூலை 11, 2025 06:43

நாம் தமிழர் கட்சி தம்பிகள் தொண்டர்கள் தேவை துரோகத்திற்கு துனை போகும் ஸெபாஸ்டியன்ஸைமனை விட்டு விலக வேண்டும். முற்றிய மணனோயாலியாக மாறிவிட்ட வறை நம்பி தங்களது பொருள் நேரத்தை வீணாக்க வேண்டாம்


பா மாதவன்
ஜூலை 11, 2025 06:22

நாட்டில் மத வெறியை தூண்டும் இது போன்ற தேச உணர்வற்ற கயவர்களை முதலில் உள்ளே போட்டு பாடம் கற்பிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மானம் ரோஷம் அற்ற சகிப்புத் தன்மை கொண்ட இந்துக்கள் தான். அவர்களுக்கு ஒற்றுமை இருந்தால், எல்லா அரசியல் வியாதிகளும் இன்னும் நன்றாக நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாட்டிற்கு ஆட்சி செய்ய நடிகன் நமக்கு தேவை இல்லை. நல்ல மனிதன் நன்கு சிந்தித்து செயல் படுபவன் தான் அரசியலுக்கும் ஆட்சிக்கும் வர வேண்டும்.


பா மாதவன்
ஜூலை 11, 2025 06:02

மத வெறியை தூண்டும் இது போன்ற அயோக்கியர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இசுலாமிய வாக்கு பெற வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது. சினிமாத் துறையில் இருந்து வந்த ஆள் அல்லவா.. மானம் ரோஷம் இல்லாத சகிப்புத் தன்மை கொண்ட ஹிந்துக்களுக்கு ஒற்றுமை இருந்தால், எல்லா அரசியல் வியாதிகளும் நன்கு நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நடிகன் நமக்கு தேவை இல்லை. நல்லவனா என்று பார்க்க வேண்டும்.


c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:40

இவரை வெகுவிரைவில் நாடு கடத்த வேண்டும்


venugopal s
ஜூலை 10, 2025 17:48

என்ன செய்வது? முற்றிப் போய் விட்டது!


Rathna
ஜூலை 10, 2025 12:46

தீவிரவாதிகளுக்கு ஒத்து ஊதுவது எதற்காக? பிச்சை காசிற்காகவா அல்லது ஹவாலா நிதிக்காகவா?


Krishnakumar
ஜூலை 10, 2025 12:45

என்னவே பேசுற நீ .... பயங்கரவாதிகளை மதத்தின் பெயரால் விடுதலை செய்ய சொல்வதில் என்ன நியாயம் உள்ளது?


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 12:35

சீமாண்டி . நீ எவ்வளவுதான் முயன்றாலும் எல்லா ஜமாத்திலும் திமுகவுக்கே வாக்களிக்க பத்வா குடுப்பார்கள். நேரம்தான் வீண். இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடந்த போது இங்குள்ள ஒரு ஜமாஅத் கூட ஆதரிக்கவில்லை. இலங்கை முஸ்லிம்கள் கட்சி தாங்கள் வீடுகளில் தமிழ் பேசினாலும் இனத்தால் தமிழர்களே அல்ல எனக் கூறுகிறார்கள்.


சமீபத்திய செய்தி