உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேறு, சகதியுடன் 53 டி.எம்.சி.,: தமிழக அணைகளின் நிலவரம்

சேறு, சகதியுடன் 53 டி.எம்.சி.,: தமிழக அணைகளின் நிலவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே, தமிழக அணைகளில் நீர் இருப்பு, சேறு, சகதியுடன் சேர்ந்து 53 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஏரிகளும், புனரமைப்பு பணிக்காக அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. பல அணைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதால், அவற்றுக்கு ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் நீர்வரத்து கிடைக்கும். தற்போது கோடை வெயில் காரணமாக அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.பல சிறிய அணைகள் ஏற்கனவே முழுமையாக வறண்டு கிடக்கின்றன. அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், 20.6 டி.எம்.சி., கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் 3.62, ஈரோடு பவானிசாகரில் 3.49 டி.எம்.சி., தேனி வைகை அணையில் 3.15 இருப்பு உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், 6.89 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. இவ்வாறு, 90 அணைகளில், 53 டி.எம்.சி., இருப்பு உள்ளது. இவற்றில், 50 சதவீத அளவிற்கு சேறும் சகதியும் உள்ளது. கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே, கடும் வெப்பம் காரணமாக அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. குடிநீர் தேவைகளுக்கு தொடர்ச்சியாக நீர் எடுப்பதும் இதற்கு காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

panneer selvam
ஏப் 26, 2024 14:32

It is pretty sad to know that last years of Dravidian rules ,none of the dam , lakes and ponds sediments were removed resulting loss of storage capacity Interestingly people know this fact and still they do not raise their voice and question both Dravidian parties


Vivekanandan Mahalingam
ஏப் 26, 2024 14:24

தமிழக முதல்வருக்கு கவலை இல்லை அவரு மாலத்தீவில் குளிப்பார் - நம்ம நிலைமை பெங்களூரு மாதிரி ஆகிடுமோ என கவலைப்பட நிலையில் உள்ளோம்


R Kay
ஏப் 26, 2024 14:21

வெள்ளத்தில் நீர் விரயமாவதை தடுத்து தேக்கி வைக்க திட்டங்கள் இல்லை ஆர் வெங்கட்ராமன் மற்றும் காமராஜர் காலத்தோடு போனது மக்களுக்கான திட்டங்கள் அதன் பின் வந்த அனைத்தும் தனிநபர்களின் பாக்கெட்டுகளை நிரம்பவே உதவின


skanda kumar
ஏப் 26, 2024 13:00

டாஸ்மாக் தமிழ்நாட்டில் எதுவும் ஊழல் இல்லாமல் நடக்காது வாழ்க டாஸ்மாக் தமிழ்நாடு வளர்க டாஸ்மாக் தமிழியன்ஸ் புகழ்


Lion Drsekar
ஏப் 26, 2024 12:26

முழுவதுமாக தூர்வாறிவிட்டால் மழை நீர், மழை நீரின் கொள்ளளவு அதிகமாகி அணைக்கு வரும் எல்லா மழை நீரையும் சேமித்து வைக்க நேரிடும் அப்படி செய்துவிட்டால், லாரி காண்ட்ராக்ட், மேல் வருமானம், முதல் போட்டுத்தான் மக்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள் அப்படி இருக்க, போட்ட முதலை எப்படி எடுப்பது? யார் வந்தாலும் இதே நிலைதான் வந்தே மாதரம்


balu xerox
ஏப் 26, 2024 12:15

சூப்பர்


ganapathy
ஏப் 26, 2024 12:12

தூரவார நாலாயிரம் கோடி மக்களின் வரிப்பண செலவுக்கு மக்கள் உன்னிடம் கணக்கு கேட்டதுக்கு இயற்கையே கொடுத்த தரமான பதில் திருட்டுத்திராவிடம்னா சும்மாவா பின்னே


A.Muralidaran
ஏப் 26, 2024 11:46

இந்த சூழ்நிலை பயன்படுத்தி தூர் வாருதல் மற்றும் கதவுகள் மராமத்து வேலைகளுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய தருணம்


Vishnu Kumar
ஏப் 26, 2024 11:29

தேவையற்ற செலவு செய்யும் திராவிட ஆட்சியாளர்கள் இதுவரை ஒரு அணை கட்ட அல்லது அணை தூர்வார எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் உள்ள விளைவுகளே இன்று நாம் அனுபவிப்பது, காமராஜர் கட்டிய அணை மட்டுமே தமிழ்நாட்டின் கடைசி அணை அதனால் தான் நாம் அவரை அரசியலுக்கு முழுக்க போட வைத்து பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறோம் இலவசம் என்ற பெயரில்


balu xerox
ஏப் 26, 2024 12:16

கரெக்ட் சார்


s selvan
ஏப் 26, 2024 10:58

மரத்தையெல்லாம் வெட்டுச்சே, அத நாடு kadathunga நேஷனல் ஹை வேஸ்ல இருந்த மரமெல்லாம் என்னாச்சுன்னு பாத்து நடவடிக்கை எடுங்க சுற்றுப்புற சுகாதாரத்தை அழித்தவர்களை தூக்கில போடுங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை