உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெற்கு ரயில்வேயில் 7 கூடுதல் ரயில் பாதை அமைக்க சர்வே பணி

தெற்கு ரயில்வேயில் 7 கூடுதல் ரயில் பாதை அமைக்க சர்வே பணி

சென்னை : தெற்கு ரயில்வேயில் ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க, இறுதிகட்ட சர்வே பணி துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் பாதையை இணைத்து, கூடுதல் ரயில் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு, அதற்கான இறுதிகட்ட ஆய்வுப் பணி, 7.80 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழித்தடங்கள் அமைப்பு, பயணியர் எண்ணிக்கை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விபரங்கள் குறித்த அறிக்கை, அடுத்த சில மாதங்களில், ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.

ரயில்வே ஒப்புதல் பெற்ற பிறகு, திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த ரயில் பாதை, பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில் வசதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ