உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின்சாரம் துண்டிப்பு சாத்தியமா?

மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின்சாரம் துண்டிப்பு சாத்தியமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற அனைத்து பகுதிகளிலும் மின் கம்பம் மேல் செல்லும் கம்பி வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.ஒரு கம்பத்திற்கும், மற்றொரு கம்பத்திற்கும் இடையே அதிக இடைவெளி, மழை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால், மின் கம்பி அறுந்து விழுகிறது.அந்த கம்பியை மிதிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் மின்சாரம் பாய்ந்து, மின் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.டிஜிட்டல் மீட்டர்இதை தடுக்க, மாநிலம் முழுதும் உள்ள, 4.05 லட்சம் டிரான்ஸ்பார்மர்களிலும், டிஜிட்டல் மீட்டர், 'டிரிப்பிங் டிவைஸ்' சாதனங்களை பொருத்தி, டிரான்ஸ்பார்மர் கண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவும், அதை தொலைதொடர்பு வசதியுடன் பிரிவு அலுவலகங்களில் இணைக்கவும் மின் வாரியம் முடிவு செய்தது.இதன் வாயிலாக, மின் கம்பி அறுந்து விழுந்ததும், டிரிப்பிங் சாதனம் உடனே செயல்பட்டு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் கம்பிக்கு மின்சாரம் செல்வதை துண்டிக்கும்.இதனால், மின் கம்பி அறுந்து விழுந்தாலும் மின்சாரம் பாயாது. இந்த விபரம், அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு, 'சிக்னல்' வாயிலாக தெரிவிக்கப்படும். அந்த இடத்திற்கு ஊழியர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்வர். இத்திட்டத்தை மின் வாரியம் இன்னும் செயல்படுத்தாமல் உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொழில்நுட்பம்எந்த மாநிலத்திலும், கம்பி அறுந்து விழுந்ததும் மின்சாரம் துண்டிக்கும் வசதி ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தில், சில இடங்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், வெற்றிகரமாக அமையவில்லை.எனவே, கம்பி அறுந்த உடனே மின்சாரம் துண்டிக்கும் தொழில்நுட்பம், அதை எந்த முறையில் செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக, சி.பி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் ஆலோசனைக்கு ஏற்ப விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 13, 2024 12:07

When a current carrying conductor is snapped or broken, the neutral in the tem gets dislocated and causing Negative Phase. Negative Phase Sequence detects imbalances in the network . For broken conductors, or for line to line faults, NPS provides sensitivity to fault scenarios that would be missed by overcurrent and earth fault. The imbalance between the phases causes NPS to be non-zero, and by setting a protection on the basis of NPS level,


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 13, 2024 11:48

மின் கம்பி அறுந்து விழுந்தால் அந்த பாதையில் ( Feeder ) செல்லும் மின்சாரம் தடைபடும் புதிது அல்ல. Earthing Device என்ற இந்த சாதனம் பிரிடிஷ் அரசாங்க காலத்திற்கு முந்தைய காலத்திலேயே இருக்கிறது. இதை ஏதோ அணில் அமைச்சர் கண்டு பிடித்ததைப்போல இன்றைய மாடல் அரசாங்க மின்வாரியம் சொல்கிறதை நினைத்தால் சிரிப்பு கூட வரமாட்டேன் என்கிறது ஒன்று மட்டும் தெரிகிறது. ஆலோசனை என்ற பெயரில் யாருக்கோ சில கோடிகள் சென்று அது சுற்றி வளைத்து யாருடைய பாக்கெட்டிற்கோ செல்ல இருக்கிறது.


Varadarajan Nagarajan
ஜன 13, 2024 11:23

முதலில் மின் வழித்தடங்களை அனுமதிக்கப்பட்ட மற்றும் வழிகாட்டி முறைப்படி வாரியம் அமைக்க வேண்டும். தற்பொழுது எந்தவித பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளும் வாரியம் கடைபிடிப்பதில்லை. ஒவ்வொரு மின்கம்பமும், அதில் உள்ள இரும்பு கிராஸ் ஆரம்களும் எர்த் செய்யப்படவேண்டும். உயர் மின் அழுத்த கம்பிகள் சாலையை கடக்கும் இடங்களில் கார்டிங் அமைக்கவேண்டும், ஒரு மின் கம்பத்திற்கும் அடுத்ததிற்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கவேண்டும், மின் கம்பிகள் போதுமான அளவில்தான் தொய்வு இருக்கவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 13, 2024 09:47

இது ஒன்றும் அதிநவீன தொழில் நுட்பம் இல்லை ..... ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் ....


Victor Christopher
ஜன 13, 2024 09:18

Too late but welcome. Take the advise from Singapore or Europe please.


Pandi Muni
ஜன 13, 2024 18:18

திருட்டு திராவிடனுக்கு புது வழியா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை