உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு; அண்ணாமலை பேட்டி

தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு; அண்ணாமலை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு,'' என, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சியின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு, கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர்., அரங்கில் நேற்று நடந்தது. கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூகப்பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு, நல்லாட்சி விருதுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மை காலமாக அரசு பஸ்கள் விபத்திற்கு உள்ளாகின்றன. அரசு பஸ்களை சோதித்து தரசான்று வழங்க வேண்டும். தமிழக தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும் என்பது பின்னால் தான் தெரியும். அனைவரும் நல்ல முடிவெடுப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை பார்த்து வருகிறோம். தி.மு.க., ஆட்சி முடியும் நேரத்தில் உள்ளது. அவர்கள் இன்னும், 100 நாட்கள் தான் ஆட்சியில் இருப்பார்கள். அனைத்து மத பண்டிக்கைக்கும் பிரதமர் வாழ்த்து கூறுகிறார். ஆனால், முதல்வர் கிறிஸ்துவர், முஸ்லிம் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறுகிறார். இதில் இருந்து மத அரசியல் செய்வது யார் என்பது தெரியும். யார் என்ன அரசியல் செய்கின்றனர் என, தமிழக மக்களுக்கு தெரியும். தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு. பா.ஜ., பூத் கமிட்டியை வலிமைப்படுத்தி உள்ளோம். போலீசார், மிகப்பெரிய மனஉளைச்சலில் உள்ளனர். அந்த துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
டிச 26, 2025 07:57

பிஜேபி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் மாநில செல்வாக்கு இல்லாத எடப்பாடி, பன்னீர், சசி கோஷ்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த விளைவு. மாநில தேர்தலுக்கு முன் பிஜேபி 4 பகுதியாக பிரித்து தன் கட்சி பிரமுகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கோவை சுற்றி அண்ணாமலை, மதுரை நாகேந்திரன், திருச்சி வன்னியர் ஒருவர், சென்னை தலித் ஒருவர். எடப்பாடி கட்டுக்குள் வரவில்லை என்றால், அவரை வெளியேற்ற வேண்டும். அதிகம் சிறுபான்மை ஓட்டு பிஜேபிக்கு இங்கு வராது. தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சி, செல்வாக்கு மிகுந்த சுயேட்சை வாய்ப்பு பெற வேண்டும். நிச்சயமாக தனி பெரும்பான்மை எந்த கட்சிக்கும் வராது. பிஜேபி கீழ் ஆட்சி அமைக்க முடியும்.


chennai sivakumar
டிச 26, 2025 07:35

ஐயம் சாரி.. வெயிட் அண்ட் watch


ராஜா
டிச 26, 2025 07:22

இம்புட்டு நாள் கழிச்சி இந்த ஐடியா எல்லாம் எங்க இருந்து வருது நய்னா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை