உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்கும்

திருநெல்வேலி வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்கும்

சென்னை:சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரயிலில், முன்பதிவு, 130 சதவீதமாக இருக்கிறது. பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் - நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு, கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலும், கோவில்பட்டியில் நிற்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், கோவில்பட்டியில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ