உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு சர்ஜரி செய்வதில் சிக்கல்: ரேபிஸ் நோய் பாதிக்கும் அபாயம்

சிறுமிக்கு சர்ஜரி செய்வதில் சிக்கல்: ரேபிஸ் நோய் பாதிக்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சிறுமிக்கு, ரேபிஸ் நோய் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், நாய்களுடன் உரிமையாளர்கள் மதுரை சென்றுள்ளனர்.சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், மாநகராட்சி பூங்காவின் காவலாளியாகவும், பராமரிப்பாளராகவும் ரகு என்பவர் உள்ளார். அதே பூங்காவில் மனைவி சோனியா, 5 வயது மகள் சுரக் ஷாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 5ம் தேதி சிறுமி சுரக் ஷா பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, எதிர் குடியிருப்பில் இருக்கும் புகழேந்தி வளர்க்கும் வெளிநாட்டு இன இரண்டு 'ராட்வைலர்' நாய்கள் சிறுமியை கடித்து குதறின.இதில், பலத்த காயமடைந்த சிறுமி, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அச்சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கருதுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால், சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை தரப்பில் நிர்வாகிகள் கூறியதாவது: சிறுமிக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அறுவை சிகிச்சைக்கான அனைத்து முன்பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், 'ரேபிஸ்' நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால், 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அந்நோய் ஏற்படாதவாறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படாதபட்சத்தில், அச்சிறுமிக்கு நாளை பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுரையில் உரிமையாளர்

நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, தனலக் ஷ்மி, வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேரை கைது செய்து, போலீஸ் ஜாமினில் விடுவித்தனர். அதேநேரம், நாய்களை இரண்டு நாட்களில், தன்னார்வ நிறுவனமான என்.ஜி.ஓ.,விடம் ஒப்படைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல், நாய்களுடன் உரிமையாளர்கள் மதுரை சென்றுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர்களை மொபைல் போனில் அழைத்து விசாரித்த போது, மதுரை சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நாய்களின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் இடம் குறித்து கேட்டு வருகிறோம். அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

angbu ganesh
மே 10, 2024 16:15

தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும், சட்டம் எல்லோருக்குமே சமம் பணம் வச்சிருக்கறவன் அவனுங்க வீட்டுக்குள்ளேயே வளர்க்கணும், இது மாதிரி இன்னொரு சம்பவம் நடக்க கூடாது, அரசு வேடிக்கை பார்க்க கோடைக்கு போக கூடாது


angbu ganesh
மே 10, 2024 16:06

இவனுங்க செய்யல நாய்க்கு இருக்கற மரியாதை கூட மனுஷங்களுக்கு இல்ல, ஏன் இதுல அரசு தலையிட கூடாது, அவனுங்க எப்படி நாய்களுடன் தப்பிச்செல்லலாம், போலீசுக்கு தகவல் தெரிவிச்சிட்டு போனாங்கன்னா அப்புறம் ஏன் கார்பொரேஷன் ஆட்கள் அவர்கல் வீட்டுக்கு , போகணும், பணம் இருந்தா இவனுங்க ஆட்சியில் ஏதும் நடக்கும்


Mani . V
மே 09, 2024 05:11

"அந்த நாயின் உரிமையாளர் பணக்காரரா?" "ஆமாம், யுவர் ஹார்" "அப்படியானால் நாயின் உரிமையாளர் மீது தவறில்லை அந்த சிறுமி மற்றும் அவரின் தாயார் இருவர் மீதும்தான் தவறு இருக்கிறது அதனால் அந்த நாயை ஸாரி அந்த உரிமையாளரை அவிழ்த்து விட்டு ஸாரி விடுதலை செய்து தகுந்த பாதுகாப்பு வழங்கவும்"


Mani . V
மே 09, 2024 05:09

நாயின் உரிமையாளர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா?


அசோகன்
மே 08, 2024 16:59

நாய் ஓனர் நாயை கைது செய்தவுடன் தகுந்த பாதுகாப்புடன் வீட்டில் விடப்பட்டார்...... அந்த குழந்தையின் தகப்பனை இனி கைது செய்வார்கள் நாய் இருக்கும் இடத்தில் ஏன் குழந்தையை விளையாட விட்டாய் என்று...... விளங்கிடும் திராவிட மாடல் ???


Vijay D Ratnam
மே 08, 2024 13:22

நீதிமன்றம் தன்னிச்சையாக தலையிட்டு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு நாய் ஓனர் ஐந்து கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் பூரணமாக குணமாகும் வரை முழு மருத்துவச்செலவையும் நாய் ஓனர் ஏற்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் பாவம் அந்த குழந்தையின் பெற்றோர் ஏழைகள் எளிய மனிதர்கள் இதுவே ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது உயர் அதிகாரியாகவோ ரவுடியாகவோ வசதிபடைத்த மனிதராகவோ இருந்திருந்தால் நாயையும் நாய்க்காரனையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி இருப்பார்களே


Suppan
மே 08, 2024 13:05

வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச்செல்லும் பொழுது கண்டிப்பாக அதன் கழுத்தில் வார் கட்டப்பட்டு அண்ட் ஒரு முனை நடத்துபவரின் கையில் இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது அதை இந்தப்புகழேந்தி பொருட்படுத்தினாரா? இல்லையென்றால் அவர் நிச்சயம் கடும் தண்டனை பெறவேண்டும்


Indian
மே 08, 2024 12:20

தெரு நாய்களின் தொல்லையும் ரொம்ப அதிகம் அரசு தெரு நாய்களை கண்டு கொள்வதேயில்லை ப்ளூ கிராஸ் கு மனிதனை விட நாயே முக்கியம் எப்படி நாடு முன்னேறும்


Indian
மே 08, 2024 12:20

தெரு நாய்களின் தொல்லையும் ரொம்ப அதிகம் அரசு தெரு நாய்களை கண்டு கொள்வதேயில்லை ப்ளூ கிராஸ் கு மனிதனை விட நாயே முக்கியம் எப்படி நாடு முன்னேறும்


Ramesh Sargam
மே 08, 2024 11:59

குழந்தை மற்றும் குழந்தையின் தாய், இருவரின் மொத்த மருத்துவ செலவையும், நாயின் உரிமையாளர்கள் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிடவேண்டும் மேலும் இனி இதுபோன்று அவர்கள் நாய் செய்தால், நாயுடன் அவர்களும் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்படவேண்டும் தண்டனை நான் கூறியபடி இருந்தால், பின்னாளில் யாரும் நாய் வளர்க்க ஆசைப்பட மாட்டார்கள்


மேலும் செய்திகள்