உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணியில் இணைய 100 சீட்; அடம் பிடிக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்

அ.தி.மு.க., கூட்டணியில் இணைய 100 சீட்; அடம் பிடிக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்

சென்னை: 'அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 100 தொகுதிகளை விட்டுத் தர வேண்டும்' என , த.வெ.க., தலைவர் பிடிவாதம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறி வந்தார். இதற்காக மாநிலம் முழுதும், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2wwj4ir2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, சனிக்கிழமைகளில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வதற்கான பட்டியலையும் விஜய் வெளியிட்டார். எதிர்க்கட்சி தலைவர் திருச்சி, அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம் , நாமக்கல் மாவட்டங்களில், அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவரை பார்ப்பதற்கு பெருமளவில் கூட்டம் கூடியது. இந்நிலையில், கரூரில், செப்டம்பர் 27ம் தேதி இரவு நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, வீட்டிலேயே விஜய் முடங்கியுள்ளார். மழை பாதிப்பு, நெல் கொள்முதல் பிரச்னை, பயிர் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்னைகள், தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து வாய் திறக்காமல் விஜய் மவுனமாக உள்ளார். இதனால், விஜய் தன் கட்சியை தொடர்வாரா என்ற சந்தேகத்தில், த.வெ.க., தொண்டர்கள் உள்ளனர். இதற்கிடையே, த.வெ.க.,வை கூட்டணியில் இணைப்பதற்கான பணிகளில், அ.தி.மு.க., தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் மிதுன், விஜயை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ., அல்லாத கூட்டணி அமைக்கும் பட்சத்தில் , அதில் இணைய விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 100 தொகுதிகள் வரை, த.வெ.க.,விற்கு வழங்க வேண்டும் என்பதிலும், விஜய் பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: துவக்கத்தில் த.வெ.க., வுக்கு 20 தொகுதிகள் வரை தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது, 40 தொகுதிகள் தர உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், த.வெ.க., தலைவர் விஜய், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆவதற்கும் வாய்ப்புள்ளது என, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்கு, விஜய் அரசியல் கட்சி துவங்கவில்லை. சினிமாவில் போராடி உச்சத்திற்கு வந்த விஜய், தன் தலைமையிலேயே தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார். அடகு வைக்க மாட்டேன் எனவே, பழனிசாமி முதல்வராவதற்கு, த.வெ.க., கட்சியை அடகு வைக்க மாட்டேன் எனக் கூறி விட்டார். அதேநேரம், த.வெ.க.,விற்கு 100 தொகுதிகளை தருவதாக இருந்தால், கூட்டணிக்கு சம்மதிக்கலாம் என கூறியுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

mono sp Mano
அக் 30, 2025 09:41

விஜய் அவர்களின் கணக்கு 100 சீட் வாங்கி 80 இடம் வெற்றி பெற்றால் நம்ம இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம்


Balasubramanian
அக் 30, 2025 08:59

1 டு 100 தப்பில்லாமல் எழுத தெரியுமா.


metturaan
அக் 30, 2025 07:23

ஏனுங்ணா... சினிமா ஸ்டைலில்... ஒரு பாட்ல முதல்வராகி நாட்ட ஆள்ரதெல்லாம் உங்ளுக்கே சின்னபுள்ள தனமா தெர்லியாங்ணா...


Mahendran Puru
அக் 29, 2025 15:13

பாஜக ஆகாது என்று விஜய் சொன்னது அவர் தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துள்ளார் என்றே தெரிகிறது. இம்முறை கூட்டணி என்பது அவசியம். மனமொத்த கூட்டணியில் இணையவோ அல்லது தம் தலைமையில் அமைக்கவோ செய்யட்டும்.


Santhanakrishnan
அக் 28, 2025 20:54

எடுத்தவுடன் அகல கால் வைக்காமல் ஒரு 50 சீட் வாங்கி அதை திறமையாக ஜெயித்து கட்சியில் ஒருவரை துணை முதல்வர் ஆக்கிவிட்டு விஜய் அடுத்த 5 வருடம் நடிப்பு மக்கள் சேவை என இருந்தால் 2031 இல் இவர் தலைமையில் கூட்டணி இவர் சிஎம் என்பதே அவருக்கு நலம். அதற்கு அவர் அதிமுக கூட்டணி அதில் பிஜேபி யும் ஒரு கட்சி என சென்றால் ஒன்றும் தவறு இல்லை. பிஜேபி ஜாதி பார்க்காத கட்சி. பெரியார் கொள்கை இல்லாத கட்சி. இவருக்கு தகுந்த செல்வாக்கு சொல்வாக்கு பாதுகாப்பு எல்லாம் கொடுக்கும்


பேசும் தமிழன்
அக் 26, 2025 00:12

அவனை அப்படியே விட்டு விடுங்கள் ....ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலைமை ஏற்படும் .....கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வது போல....இவரது செல்வாக்கு வெளியே தெரிந்து மானம் போகப்போகிறது !!!


ஜெய்ஹிந்த்புரம்
அக் 25, 2025 19:53

இது விஜய்க்கு தெரியுமா?


sampath, k
அக் 25, 2025 19:33

Six months time may be given to VIJAY to win in any one of the constituency after making him as Chief Minister. Till such time, he need not come out from his house.


Nanchilguru
அக் 25, 2025 18:26

விஜய்யை முதல்வர் ஆக்கிட்டு அப்புறம் கூட எலக்சன் வச்சிக்கலாம்


Vasan
அக் 25, 2025 18:25

அ.தி.மு.க+த.வே.க கூட்டணி அமைய சாத்தியம் இல்லை. சிபிஐ அறிக்கை விஜய் குற்றமற்றவர் என்று அறிவித்த பின் விஜய்க்கு பிஜேபியும் தேவையில்லை, அதிமுகவும் தேவையில்லை. பழைய படி சனி தோறும் கிளம்பி விடுவார். பாருங்களேன், இப்படி தான் நடக்க போகிறது.


கனோஜ் ஆங்ரே
நவ 06, 2025 15:48

////விஜய் குற்றமற்றவர் என்று அறிவித்த பின்/// நீயே அறிவிச்சிடுவ போலிருக்கே... கொஞ்சம் வெயிட் பண்ணு நைனா...? சிபிஐ விசாரிச்சு... அதை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர்கிட்ட கொடுப்பாங்க... அவர் சரி..ன்னு சொன்ன பிறகுதான் உச்ச நீதிமன்றம் யார் குற்றம் செய்தவர்..னும் சொல்லும். உன்ன மாதிரி நிறைய தற்குறிங்க... “சி.பி.ஐ”...ன்ன உடனே குதியோ குதி...ன்னு குதிச்சானுங்க.. இப்பவும் குதிச்சிட்டிருக்கானுங்க...? ஆனால், அதுதான் விஜய் தனக்குத்தானே வைத்துக் கொண்ட ஆப்பு...? இது தெரியாம கூவிகிட்டிருக்கானுங்க தற்குறிங்க...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை