உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து தொகுதிகளிலும் பழனிசாமி போட்டியிட உதயகுமார் அணி விருப்பம்

அனைத்து தொகுதிகளிலும் பழனிசாமி போட்டியிட உதயகுமார் அணி விருப்பம்

மதுரை:''லோக்சபா தேர்தலில் தனித்தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட வேண்டும். அதற்காக ஜெ., பேரவை சார்பில் விருப்ப மனு அளிக்கப்படும்,'' என, எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.இதற்காக நேற்று அவர் நிர்வாகிகளுடன் சென்னை புறப்பட்டார். முன்னதாக மதுரையில் அவர் கூறியதாவது:அனைத்து தொகுதிகளிலும் பொதுச்செயலர் போட்டியிட வேண்டும் என, ஜெ., பேரவை தொண்டர்கள் விரும்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. அதற்கு தான் பிரதமர் சான்று அளித்துள்ளார். அந்த சான்று இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ள பழனிசாமிக்கும் சேரும். மக்களை காக்கும் பணியில் அவர் உள்ளார். பார்லிமென்டில் பெரியாறு, காவிரி பிரச்னை குறித்து, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவர். இவ்வாறு கூறினார்.

நிர்வாகிகள் இடையே போட்டி

அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா பொதுச்செயலராக இருந்தபோது, அவரது கவனத்தை ஈர்க்க விரும்பிய தொகுதிகள் அல்லது அனைத்து தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்வது வழக்கம். அதே பாணியை தான் இப்போது உதயகுமார் கையில் எடுத்துள்ளார். அ.தி.மு.க.,வில் விருப்பமனு தாக்கல் செய்ய மார்ச் 1 கடைசி என்பதால், பழனிசாமிக்காக விருப்பமனு தாக்கல் செய்ய நிர்வாகிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ