உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், இன்றும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஏற்கனவே, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சியுடன், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில், வரும் 26 வரை ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி