உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதயாத்திரை சென்றால் பணி மாற்றமா?

பாதயாத்திரை சென்றால் பணி மாற்றமா?

அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஒரு வாரத்திற்கு முன், அவரை தமிழக அரசு நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு பணி மாறுதல் செய்துள்ளது. 17-பி குறிப்பாணையும் வழங்கியுள்ளது. அரசு மருத்துவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது போன்ற மருத்துவர்களின் கோரிக்கைகளை முன் வைத்து, முறையான விடுப்பு எடுத்துக்கொண்டு, மேட்டூரில் இருந்து சென்னை வரை பாதையாத்திரை மேற்கொண்டார். அதற்காக, அவரை மாற்றம் செய்துள்ளனர். இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் அரசுக்கு கெட்ட பெயரை தான் ஏற்படுத்தும். ஒரு அமைப்பின் தலைவர், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வது இயல்பான விஷயம். இதற்காக பழிவாங்குவது என ஆரம்பித்தால் எந்த அமைப்பின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. சண்முகம், மாநில செயலர், மா.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sundar R
செப் 01, 2025 09:26

மொத்தத்தில், திமுக சகவாசம் காரணமாக, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கம்யூனிஸ்ட்களுக்கு காலணாவுக்கு மரியாதை இல்லை.


rama adhavan
செப் 01, 2025 08:40

அந்த மருத்துவர் செய்கை தவறானது. பணி அதிகம் எனில் பணியை ராஜினாமா செய்து விட்டு தனி ப்ராசிட்டிஸ் செய்யட்டும். ஆனால் அவருக்கு 17பி சார்ஜ் மெமோ அதிகம். இது அரசின் அடக்குமுறை அராஜகம்.


புதிய வீடியோ