உள்ளூர் செய்திகள்

நீர்ப் பறவைகள் வாழும் இடம்

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி என்னும் ஊரிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 1.29 சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஒரு சிறிய பறவைகள் சரணாலயம். இங்கு காம்ப் வாத்து, பார்-தலை கூஸ், ஹாரியர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் வலசை வந்து, தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இது தென்னிந்தியாவில் நீர் பறவைகள் வாழ்வதற்கான சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு வரும் பறவைகளின் பாதுகாப்பு கருதி, இங்கு வாழும் கிராமவாசிகள் தீபாவளி பண்டிகைக்குக்கூட வெடிகள் வெடிப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !