உள்ளூர் செய்திகள்

டெடிபியர் பொம்மைக்கு தனி மருத்துவமனை

சிறுவர் சிறுமியருக்கு, மருத்துவமனையையும் மருத்துவர்களையும் பார்த்தாலே பயம். அவர்களின் இந்த அச்சத்தை போக்கும் வகையில், துபாய் அரசு புது முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருட்களுள் ஒன்றான டெடிபியர் என்ற கரடிபொம்மைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள, ஷேக் முகம்மது ரஷீத் பின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.குழந்தைகள் தங்கள் டெடிபியர் பொம்மை பழுதடைந்தால், இங்குள்ள மருத்துவர்களிடம் கொண்டு வந்து உடல்நல பரிசோதனைகளை இலவசமாக செய்யலாம். இதுதொடர்பாக, திட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, 'சிறுவர்கள், இங்கு வருவதன் மூலம், உடல் நலம் பேணுதல், சுகாதார அடிப்படைக் கல்வி மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்வர். மருத்துவர்கள் மீதான பயம் நீங்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !