மூணு லிட்டர் தண்ணி குடிக்கணுமாம்!
கோடைக் காலம் வரும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. கோடையில் இது இன்னும் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை, சேலம், ஈரோடு நகரங்களில், இப்போது 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி உள்ளது. வெயில் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியிருக்கிறார்.