ஆயிரம் கோடி ரூபாயில் டூப்ளிகேட் டைட்டானிக்
கடந்த 1912ல், 1500 பயணிகளோடு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை, டூப்ளிக்கேட் செய்யும் பணியை, சீனாவில் உள்ள உச்சாங் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் வழங்கிய 1000 கோடி ரூபாய் நிதியில், இந்த கப்பல் உருவாக்கப் படுகிறது. 269 மீட்டர் நீளம், 28 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பலில், தூண், பிரம்மாண்ட அறைகள், நீச்சல் குளம், தியேட்டர் போன்றவை, அச்சு அசலாக டைட்டானிக் கப்பலைப் போலவே வடிவமைக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலுக்கு, டைட்டானிக் ரெப்ளிக்கா (Titanic Replica) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பயணம் செய்வதற்காக அல்ல; செயற்கை பாவனை (Simulation) முறையில், கப்பல் விபத்துக்குள்ளாவதை அனுபவமாக தரும் வகையில் உருவாக்கப்படுகிறது.