உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியால் சூழப்பட்ட பகுதி மஜுலி. மொத்தம் 352 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட மஜுலியை, 'உலகின் பெரிய ஆற்றுத் தீவு' என்று கின்னஸ் சாதனை புத்தகம், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று, சர்வானந்த சோனோவால் தலைமையிலான அசாம் அரசு, மஜுலியை தனி மாவட்டமாகத் தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியது. இதை அடுத்து, இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி உதயமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !