உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு: கொய்யாக் கணக்கு!

மூன்று சிறுவர்கள் கொய்யா மரத்தில் பழங்களைப் பறித்தனர்.கீழே இறங்கியபின், அனைவரிடமும் சமமான எண்ணிக்கையில் கொய்யாப் பழங்கள் இருந்தன.தங்களிடம் இருந்த பழங்களில், 8 பழங்களை ஒவ்வொருவரும் அங்கேயே சாப்பிட்டனர்.மொத்தமாகச் சில பழங்கள் அவர்களிடம் இருந்தன. இந்த எண்ணிக்கை, ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்றால், ஒவ்வொருவரும் எத்தனை கொய்யாப் பழங்களைப் பறித்திருப்பார்கள்?விடை: 12தீர்வு: ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கையை x என்க.மூன்று பேர் பறித்தலால், 3x.ஒவ்வொருவரும் 8 பழங்களைச் சாப்பிட்டதால், அவரவரிடம் x-8 பழங்கள் மீதமிருக்கும். இதன்மூலம், மூன்று பேரிடம் இருக்கும் மீதமுள்ள மொத்த பழங்களின் எண்ணிக்கையை 3(x-8) என்று அறியலாம். மீதமுள்ள மொத்த பழங்களின் எண்ணிக்கையானது, ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்று சொல்லியிருப்பதால்,3(x-8) = x என்று கருதலாம். இதனை, 3x-24 = x என்று சுருக்கலாம். மேலும், 3x-x = 242x = 24x = 12எனவே, ஒவ்வொருவரும் பறித்த கொய்யாப் பழங்களின் எண்ணிக்கை 12.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !