பெண் விவசாயிக்கு சிறப்பு விருது
ஜன. 26 குடியரசு தின விழாவை ஒட்டி 'தமிழக முதல்வரின் சிறப்பு விருதுகள்' வழங்கப்பட்டன. இதில், பெண் விவசாயி 'பிரசன்னா' என்பவருக்கு சிறப்பு விருது கிடைத்தது. இந்த விருது, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பதக்கமும் கொண்டது. மதுரை மாவட்டம், திருப்பாலையைச் சேர்ந்தவர் பிரசன்னா. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.