மார்ஜின் மர்மம்!
நோட்டுகளில் மார்ஜின் விடப்படுகிறது அல்லவா? அது எதற்கு? நாம் மோசமாக எழுதினால், அதைக் கண்டித்து டீச்சர் குறிப்பு எழுதவா?இல்லை. முற்காலத்தில் இவை போன்ற நோட்டுப் புத்தகங்களை எலிகள் கொறித்துவிடுவது அதிகமாக இருந்தது. அவை முதலில் ஓரங்களைத்தான் சிதைக்கும். எனவே எலி கடித்தாலும், நாம் எழுதியது பறிபோகாமல் இருக்க மார்ஜின் விடப்படும் வழக்கம் தொடங்கியது.