உள்ளூர் செய்திகள்

மழை வருமா? வராதா?

மார்ச் 23 - உலக வானிலை தினம் வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே! ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலை தினம்' (வேர்ல்டு மெட்ராலாஜிகல் டே - World Meteorological Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தத் தினத்தில், மக்களுக்கு வானிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.வானிலை பற்றிய செய்திகளில் குறிப்பாக, வெப்ப மயமாதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல், ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசுபடுதல், இயற்கை பேரிடர்கள், மழை பற்றிய நிகழ்வுகள் முக்கியமானவை. தற்போது விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வானிலை செய்திகளை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம்.வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினத்தின் நோக்கம்.சில வானிலை குறியீடுகள்ஷாஃப்ட் (Shaft) - 3 mphக்கும் குறைவான காற்று.காம் (Calm) - காற்று இல்லாத நிலை.பென்னன்ட் (Pennant) - காற்றின் வேகம் 55-60 mphக்கும்(mph - mile per hour) இடையில்1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாக வைத்து வானிலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான மையப் பொருள்: 'அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக மழை - எதிர்கொள்ளும் விதம்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !