உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.இக்கோயிலில் மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் காலை அம்மன் மண்டகப்படி எழுந்தருளலும், விழா நாட்களில் வாகனங்களில் அம்மன் வீதியுலாவும் நடந்தது.பூக்குழி திருவிழாவான நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி பெரிய மாரியம்மன், பட்டத்தரசி அம்மன், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர் உட்பட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து ரத வீதி சுற்றி வந்தனர்.மதியம் 12:50 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வீதியுலா துவங்கியது. இதனையடுத்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி