நண்பனே...
UPDATED : ஜூலை 26, 2024 | ADDED : ஜூலை 26, 2024
* மித்ரன் என்றால் நண்பன். விஸ்வாமித்திரர் என்றால் 'உலகின் நண்பன்'. * திசை காவலர்களில் ஒருவரான குபேரர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் இருவரும் சிவனின் நண்பர்கள். * வியாக்ரபாத மகரிஷியின் மகன் உபமன்யு முனிவர். இவரது பாடசாலையில் ஒன்றாக படித்த நண்பர்கள் கிருஷ்ணர், குசேலர். * கேரள மாநிலம் திருவஞ்சைக்களத்தை சேர்ந்த சேரமான் பெருமாளும், சுந்தரரும் நெருங்கிய நண்பர்கள். * வள்ளலான அதியமான் தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வையாருக்கு கொடுத்தார். * பாரி மன்னரும், புலவர் கபிலரும் நட்புக்கு உதாரணமானவர்கள். * கோப்பெருஞ்சோழனை நேரில் பார்க்காமலேயே நட்பு கொண்டவர் புலவரான பிசிராந்தையார்.